இருபத்தைந்தாம் அதிகாரம் - கூடா வொழுக்கம்
அஃதாவது, பொருந்தாத ஒழுக்கம்
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க
ளைந்து மகத்தே நகும். (241)
பொருள்: வஞ்ச மனத்தான் படிறு ஒழுக்கம் - வஞ்சக மனத்தை யுடையவனது பொய்யான (தவ) ஒழுக்கத்தை, பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் -உடம்போடு பொருந்திய பொறிகள் ஐந்தும் உள்ளே சிரிக்கும்.
அகலம்: படிறு + ஒழுக்கம் = படிற்றொழுக்கம். படிறு -பொய். பூதங்கள் என்பது ஆகுபெயர், அவற்றைத் தன்மாத்திரையாக வுடைய பொறி களுக்கு ஆயினமையால். பொறி -அறிகருவி. ஐம்பொறிகளாகிய மெய், வாய்,கண், மூக்கு, செவி என்பவற்றிற்கு முறையே மண், நீர், தீ, காற்று, ஆகாயம் தன் மாத்திரைகள். அதனால், பொறிகளைப் பூதங்கள் என்றார்.
கருத்து: பொய்யயாழுக்கம் உடையானை அவன் மனச்சான்றே வருத்தும்.
வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந்
தானறி குற்றம் படின். (242)
பொருள்: தன் நெஞ்சம் தான் அறி குற்றம் படின் - தனது மனம் தான்அறிந்த குற்றத்தின்கண் பொருந்தின், வான் உயர் தோற்றம் எவன் செய்யும் -வான் போல் உயர்ந்த தவ வேடம் யாது பயனைச் செய்யும்? (ஒரு பயனையுஞ் செய்யாது)
அகலம்: மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘குற்றம் படின்’, மற்றை மூவர் பாடம் ‘குற்றப் படின்’.
கருத்து: தீய ஒழுக்க முடையானுக்கு அவன் தவ வேடம் யாதொரு பயனையும் தாராது.
வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று. (243)
பொருள்: வலி இல் நிலைமையான் வல் உருவம் (கொள்ளல்)- (தீய நெறிகளில் செல்ல விடாது மனத்தை அடக்கும்) வலிமை யில்லாத நிலைமையை யுடையவன் வலிய தவ வேடத்தைக் கொள்ளுதல், பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று - பசு புலியினுடைய தோலை (த்தன் மீது) போர்த்துக் கொண்டு (பைங் கூழை) மேய்ந்தாற் போலும்.
அகலம்: ‘மேய்ந்து’ என்றமையால், ‘பைங்கூழ்’ என்பது வருவித்து உரைக்கப் பட்டது. மேய்ந்தற்று என்பது வினைத் தொகை. அது மேய்ந்தால் அற்று என விரியும். கொள்ளல் என்பது அவாய் நிலையான் வந்தது.
கருத்து: மனத்தை அடக்கும் வலி இல்லாதான் தவ வேடம் புனைதல் உலகத்தாரை வஞ்சித்தற்காகவே.
தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று. (244)
பொருள்: தவம் மறைந்து அல்லவை செய்தல் -(ஒருவன்) தவ வேடத்தின்கண் மறைந்து (நின்று) மறங்களைச் செய்தல் வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்து அற்று - வேடன் புதலின்கண் மறைந்து (நின்று) பறவைகளைப் பிணித்தாற் போலும்.
அகலம்: தவம் என்பது ஆகு பெயர், தவ வேடத்திற்கு ஆயினமையால். புதல் - நாணல்,புல். புள் என்பது சாதி ஒருமைப் பெயர். சிமிழ்த்தற்று என்பது வினையயச்சத் தொகை.
கருத்து: தவவேடம் புனைந்து பாவம் புரிதல் கொலை செய்தலை ஒக்கும்.
பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்
றேதம் பலவுந் தரும். (245)
பொருள்: பற்று அற்றேம் என்பார் படிறு ஒழுக்கம் -(அகத்தின்கண் யாதொரு பற்றினின்றும் நீங்காதாரா யிருக்கப் புறத்தில்) பற்றுக் களினின்று நீங்கினேம் என்று கூறும் துறவு வேடத்தவரது பொய் யயாழுக்கம், எற்று எற்று என்ற ஏதம் பலவும் தரும் - கொல் வெட்டு என்று சொல்லுதற்குக் காரணமாய குற்றங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
அகலம்: எற்று எற்று என்பது துறவு வேடத்தான் தீயன புரிதற்காகப் பிறன் இல்லின்கண் சென்று பிறன் கைப்பட்ட பொழுது அப் பிறன் தன் பக்கத்தில் நிற்பானைப் பார்த்துக் கூறும் கூற்று. ‘என்ற ஏதம்’ என்பது செய்யுள் விகாரத்தால் ‘அ’கரங் கெட்டு என்றேதம் என்று ஆயிற்று. தருமர் பாடம் ‘பற்றற்றோ மென்பான்’ தாமத்தர் பாடம் பற்றற்றே மென்பான்’. நச்சர் பாடம் ‘பற்றற்றோ மென்பார்’.
கருத்து: தவ வேடம் புனைந்து தீயன புரிவோர் கொலையுண்டு இறப்பர்.
நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில். (246)
பொருள்: நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - மனத்தில் (ஒரு பொருளினின்றும்) துறவாதவராய் (எல்லாப் பொருள்களினின்றும்) துறந்தவர் போல (உலகத்தாரை) வஞ்சித்து வாழ்வாரினும், வன் கண்ணார் இல் - கொடுமையாளர் (வேறு) இல்லை.
அகலம்: வன் கண்ணார் என்பது ணகர வொற்றுக் கெட்டு நின்றது.
கருத்து: அவ்வாறு வாழ்பவர் மிக மிகக் கொடியர்.
புறங்குன்றிக் கண்டனைய ரேனு மகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து. (247)
பொருள்: புறம் குன்றி கண்டு அனையர் ஏனும் -புறத்தில் குன்றி உருண்டை (யின் செம்மை நிறத்தை) ஒப்பவரேனும், அகம் குன்றி மூக்கின் கரியார் உடைத்து- அகத்தில் குன்றி மூக்கைப் போலக் கரிய தன்மையை யுடையவரை (இவ்வுலகம்) உடையது.
அகலம்: நூற்கண்டு என்பது போலக் குன்றிக் கண்டு என்பது குன்றி உருண்டை என்று பொருள் தந்து நின்றது. கரிய தன்மை‡மறங்கள் நிறைந்த தன்மை. குன்றிக் கண்டு என்பது ஆகு பெயர், அதன் நிறத்திற்கு ஆயினமையால். தருமர், தாமத்தர் பாடம் ‘புறங்குன்றிக் கண்டனையர்’, மற்றை மூவர் பாடம் ‘புறங்குன்றி கண்டனையர்’.
கருத்து: ஒருவனை அவனது புற வேடத்தாற் கொள்ளற்க.
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். (248)
பொருள்: மனத்தது மாசு ஆக - மனத்திலுள்ளது குற்றமாயிருக்க, மாண்டார் நீர் ஆடி -மாட்சிமைப்பட்ட தவத்தினர் (மூழ்கும் தூய) ஆறுகளில் மூழ்கி, மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் (உண்டு) -ஒளித்து ஒழுகும் மாந்தர் பலர் (இவ் வுலகத் தின்கண்) உண்டு.
அகலம்: நீர் என்பது ஆகுபெயர், அதனையுடைய ஆற்றுக்கு ஆயின மையால். ஒளித்து ஒழுகலாவது, தீய வினைகளைப் பிறர் அறியாமல் செய்தல். தூய ஆறாவது, தன்கண் மூழ்கினவரைத் தூயராக்கும் ஆறு. அஃதாவது, கங்கை போன்ற புண்ணிய நதி.
கருத்து: ஒருவனை அவனது புறச் செயல்களால் கொள்ளற்க.
கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல். (249)
பொருள்: கணை கொடிது -அம்பு (உருவத்தால் நேரியதாயினும் செயலால்) கொடியது. யாழ்கோடு செவ்விது - யாழின் கோடு (உருவத்தால் கோடிய தாயினும் செயலால்) நேரியது ; ஆங்கு அன்ன - அவ்வாறு போல, வினை படு பாலால் கொள்ளல் -(ஒவ்வொருவரையும் அவரவர்) வினைகள் படும் பகுதியால் கொள்க.
அகலம்: கொள்ளல் என்பது ளகர வொற்றுக் கெட்டு நின்றது. நேரியது‡ நல்லது. கோடு-கொம்பு. அஃதாவது, யாழின் நரம்பின் குச்சுகள் செருகப் பட்டிருக்கும் தலைப் பாகம்.
கருத்து: தீய வினையுடையாரைத் தீய ரென்றும், தூய வினையுடையாரைத் தூய ரென்றும் அவரவர் வினைகளை நோக்கி ஒவ்வொருரையுங் கொள்க.
மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின். (250)
பொருள்: உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர் பழித்ததாகிய தீய ஒழுக்கத்தை ஒழித்து விட்டால், மழித்தலும் நீட்டலும் வேண்டா - (ஒருவன்) மொட்டை யடித்தலும் சடை வளர்த்தலும் வேண்டா.
அகலம்: மழித்தலும் நீட்டலும் துறவிகள் பூணும் வேடமாகலான், அவை ஈண்டுக் கூறப்பட்டன. ‘உலக மென்பது உயர்ந்தோர் மாட்டே’ என்ப வாகலான், உலகம் என்பதற்கு உயர்ந்தோர் எனப் பொருள் உரைக்கப் பட்டது. தருமர் பாடம் ‘வழித்தலும்’.
கருத்து: தவத்திற்கு வேடம் இன்றி யமையாத தன்று; தீய ஒழுக்கத்தை விடுதலே இன்றியமையாதது.
Sunday
தவம்
இருபத்து நான்காம் அதிகாரம்-தவம்
அஃதாவது, நோன்பு.
அஃது இன்ன தென்பதை ஆசிரியர் இவ்வதிகாரத்தின் முதற் குறளில் கூறுகின்றார்.
உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு. (231)
பொருள்: தவத்திற்கு உரு - தவத்திற்கு வடிவு, உற்ற நோய் நோன்றல் (உம்) உயிர்க்கு உறுகண் செய்யாமை(யும்) அற்றே - (தம்மைப்) பொருந்திய நோயைப் பொறுத்தலும் (ஓர்) உயிர்க்கு(ம்) துன்பம் செய்யாமையும் (ஆகிய) அவ்வ ளவினதே.
அகலம்: ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. எண்ணும்மை இரண்டும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. அற்றே என்றமையால், தனது உடம்பை வருத்தல் முதலியன தவத்தின்பால் படா என்று கொள்க. உரு, உருவம், வடிவு, வடிவம் இவை ஒரு பொருள் குறிக்கும் சொற்கள். உம்மை உயர்வு சிறப்பு.
கருத்து: உற்ற நோயைப் பொறுத்தாலும் உயிர்க்கு உறுகண் செய்யாமை யுமே தவம்.
தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
யஃதிலார் மேற்கொள் வது. (232)
பொருள்: தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - தவ வேடமும் தவ முடையவர்க்குப் பொருந்தும்; அஃது இல்லார் அதனை மேற்கொள்வது அவம் -தவம் இல்லாதார் தவ வேடத்தை (த்தம்) மேற்கொள்வது பயனற்ற செயல்.
அகலம்: முதல் ‘தவம்’ ஆகு பெயர், தவ வேடத்திற்கு ஆயினமையால். ‘தவமும் தவமுடையார்க் காகும்’ என்பதற்குத் ‘தவப் பயனே யன்றித் தவந்தானும் முற்றுவம் உடையார்க்கே ஆகும்’ என்று உரைப்பாரும் உளர். அவ் வுரை ஒரு சிறிதும் பொருந்தாது, முற்ற வத்திற்கும் முற்றவம் வேண்டும் என்று முடிவில்லாது கூறிக்கொண்டே போக நேரு மாகலான். அத்தகைய முடிவற்ற கூற்றை வட நூலார் அனவத்தா தோடம் என்பர்.
கருத்து: தவ வேடம் தவம் உடையார்க்கே பொருந்தும்.
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்க டவம். (233)
பொருள்: துறந்தார்க்கு துப்புரவு வேண்டி - (இல் வாழ்க்கையைத்) துறந்த வர்க்கு உணவு முதலியன (அளித்தலை) விரும்பி, மற்றையவர்கள் தவம் மறந்தார்கொல் -இல்வாழ்வார்கள் தவத்தினை மறந்தார்களோ?
அகலம்: இல்வாழ்வாரும் தவத்தினைக் கைக்கொள்ளத் தக்கவராயிருக்க, அவர் அதனைக் கைக் கொள்ளாம லிருப்பதைக் கண்டித்தவாறு. கொல் என்பது ஈண்டுக் குறிப்பு வினாப் பொருளில் வந்தது.
கருத்து: இல்வாழ்வாரும் தவத்தினைக் கைக் கொள்க.
ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு
மெண்ணிற் றவத்தான் வரும். (234)
பொருள்: ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் -பகைவரை அழித்தலும் நட்பினரை ஆக்குதலும், தவத்தால் எண்ணின் வரும் - தவத்தோடு (கூடி நின்று) நினைப்பின் (உடனே) எய்தும்.
அகலம்: ஆக்குதல் -செல்வம் முதலியவற்றை உடையவராக்குதல். ‘ஆன்’ உருபு ‘ஒடு’ உருபுப் பொருளில் வந்தது.
கருத்து: ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் தவத்தினர் நினைத்த மாத்திரத்தில் நிகழும்.
வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப் படும். (235)
பொருள்: வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் - (தாம்) விரும்பியவற்றை விரும்பிய வாறு அடைதலால், செய் தவம் ஈண்டு முயல படும் - (அறிஞர்) செய்யும் தவத்தை இப் பிறப்பின்கண் (செய்தற்கு ஒவ்வொருவரும்) முயல வேண்டும்.
அகலம்: ‘வேண்டிய ஆங்கு’ என்பது அகரம் கெட்டு நின்றது. ‘செய் தவம்’ என்பதிலுள்ள செய் என்பதனைத் துணை வினையாகக் கொள்ளினும் அமையும்.
கருத்து: விரும்பியவற்றை யயல்லாம் தவம் தருமாகலான், அதனை விரைந்து செய்க.
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா
ரவஞ்செய்வா ராசையுட் பட்டு. (236)
பொருள்: தவம் செய்வாரே தம் கருமம் செய்வார் -தவத்தைச் செய்பவரே தமது கருமத்தைச் செய்பவர்; அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - தவஞ் செய்யாதார் ஆசையுட் சிக்கி வீண் கருமம் செய்பவர்.
அகலம்: கருமம் - வினை. செய்வாரே என்பதன் ஏகாரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. ‘மற்று’ அசை. தருமர், நச்சர் பாடம் ‘ஆசையுட் பட்டு’. மற்றை மூவர் பாடம் ‘ஆசையிற் பட்டு’.
கருத்து: தவஞ் செய்வாரே தம் கருமம் செய்தவராவர்.
சுடச்சுடரும் பொன்போ லொளிமிகுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (237)
பொருள்: துன்பம் சுட சுட நோற்கிற்பவர்க்கு -(தம்மைத்) துன்பம் வருத்த வருத்தத் தவஞ் செய்ய வல்லார்க்கு, சுட சுடரும் பொன்போல் ஒளி மிகும் - சுடுங் காலையில் ஒளிரும் பொன் போல (அறிவாகிய) ஒளி மிகும்.
அகலம்: முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘ஒளிவிடும்’. மணக்குடவர் பாடம் ‘சுடச் சுடப் பொன்போல’. ‘ஒளிவிடும்’ என்பதினும் ‘ஒளி மிகும்’ என்பது மிகப் பொருத்தமான பொருளைத் தருதலான், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.
கருத்து: தவம் செய்வார்க்கு அறிவு வளரும்.
தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். (238)
பொருள்: தன் உயிர் தான் அற பெற்றானை-தனது உயிர் ‘தான்’ என்பது நீங்கப் பெற்றவனை, ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் -மற்றைய நிலை பேறுடைய உயிர்களெல்லாம் வணங்கும்.
அகலம்: தான் -‘தான்’ என்று அகங்கரித்தல். ‘தன் உயிர்தான் அறப் பெற்றானை’ என்பதற்குத் ‘தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை’ என்ற உரை பொருந்தாது.
கருத்து: அகங்காரம் நீங்கப் பெற்றவன் கடவுளாகப் போற்றப் படுவான்.
கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி
னாற்ற றலைப்பட் டவர்க்கு. (239)
பொருள்: நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு -தவம் இழைத்தலின் வலிமையை அடைந்தார்க்கு, கூற்றம் குதித்தலும் கை கூடும் - கூற்றத்தைக் (கடந்து) குதித்தலும் எய்தும்.
அகலம்: கூற்றத்தைக் கடந்து குதித்தலாவது, கூற்றத்தினின்று தப்புதல். கூற்றம் ‡ எமன்.
கருத்து: தவத்தைச் செய்தவர் மரணத்தைக் கடப்பர்.
இலர்பல ராகிய காரண நோற்றார்
சிலர்பலர் நோலா தவர். (240)
பொருள்: இலர் பலர் ஆகிய காரணம் நோலாதவர் பலர் - (இவ் வுலகின்கண்) வறிஞர் பலராயதற்குக் காரணம் (முன்) தவம் இழையாதார் பலர் ; (உளர் சிலர் ஆகிய காரணம்) நோற்றார் சிலர் - (இவ் வுலகின்கண்) செல்வந்தர் சிலர் ஆயதற்குக் காரணம் (முன்) தவம் இழைத்தார் சிலர்.
அகலம்: ‘உளர் சிலர் ஆகிய காரணம்’ என்பது சொல்லெச்சம் ஆகியதற்குக் காரணத்தை ஆகிய காரணம் என்றார். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘ நோற் பார்’. ‘ஆகிய காரணம்’ என்று ஆசிரியர் கூறியிருத்தலான், ‘நோற்றார்’ என்பதே அவர் பாடம் என்று கொள்க.
கருத்து: தவம் செய்தலும் அது செய்யாமையும் முறையே செல்வத்திற்கும் வறுமைக்கும் காரணம்.
அஃதாவது, நோன்பு.
அஃது இன்ன தென்பதை ஆசிரியர் இவ்வதிகாரத்தின் முதற் குறளில் கூறுகின்றார்.
உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு. (231)
பொருள்: தவத்திற்கு உரு - தவத்திற்கு வடிவு, உற்ற நோய் நோன்றல் (உம்) உயிர்க்கு உறுகண் செய்யாமை(யும்) அற்றே - (தம்மைப்) பொருந்திய நோயைப் பொறுத்தலும் (ஓர்) உயிர்க்கு(ம்) துன்பம் செய்யாமையும் (ஆகிய) அவ்வ ளவினதே.
அகலம்: ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. எண்ணும்மை இரண்டும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. அற்றே என்றமையால், தனது உடம்பை வருத்தல் முதலியன தவத்தின்பால் படா என்று கொள்க. உரு, உருவம், வடிவு, வடிவம் இவை ஒரு பொருள் குறிக்கும் சொற்கள். உம்மை உயர்வு சிறப்பு.
கருத்து: உற்ற நோயைப் பொறுத்தாலும் உயிர்க்கு உறுகண் செய்யாமை யுமே தவம்.
தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
யஃதிலார் மேற்கொள் வது. (232)
பொருள்: தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - தவ வேடமும் தவ முடையவர்க்குப் பொருந்தும்; அஃது இல்லார் அதனை மேற்கொள்வது அவம் -தவம் இல்லாதார் தவ வேடத்தை (த்தம்) மேற்கொள்வது பயனற்ற செயல்.
அகலம்: முதல் ‘தவம்’ ஆகு பெயர், தவ வேடத்திற்கு ஆயினமையால். ‘தவமும் தவமுடையார்க் காகும்’ என்பதற்குத் ‘தவப் பயனே யன்றித் தவந்தானும் முற்றுவம் உடையார்க்கே ஆகும்’ என்று உரைப்பாரும் உளர். அவ் வுரை ஒரு சிறிதும் பொருந்தாது, முற்ற வத்திற்கும் முற்றவம் வேண்டும் என்று முடிவில்லாது கூறிக்கொண்டே போக நேரு மாகலான். அத்தகைய முடிவற்ற கூற்றை வட நூலார் அனவத்தா தோடம் என்பர்.
கருத்து: தவ வேடம் தவம் உடையார்க்கே பொருந்தும்.
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்க டவம். (233)
பொருள்: துறந்தார்க்கு துப்புரவு வேண்டி - (இல் வாழ்க்கையைத்) துறந்த வர்க்கு உணவு முதலியன (அளித்தலை) விரும்பி, மற்றையவர்கள் தவம் மறந்தார்கொல் -இல்வாழ்வார்கள் தவத்தினை மறந்தார்களோ?
அகலம்: இல்வாழ்வாரும் தவத்தினைக் கைக்கொள்ளத் தக்கவராயிருக்க, அவர் அதனைக் கைக் கொள்ளாம லிருப்பதைக் கண்டித்தவாறு. கொல் என்பது ஈண்டுக் குறிப்பு வினாப் பொருளில் வந்தது.
கருத்து: இல்வாழ்வாரும் தவத்தினைக் கைக் கொள்க.
ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு
மெண்ணிற் றவத்தான் வரும். (234)
பொருள்: ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் -பகைவரை அழித்தலும் நட்பினரை ஆக்குதலும், தவத்தால் எண்ணின் வரும் - தவத்தோடு (கூடி நின்று) நினைப்பின் (உடனே) எய்தும்.
அகலம்: ஆக்குதல் -செல்வம் முதலியவற்றை உடையவராக்குதல். ‘ஆன்’ உருபு ‘ஒடு’ உருபுப் பொருளில் வந்தது.
கருத்து: ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் தவத்தினர் நினைத்த மாத்திரத்தில் நிகழும்.
வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப் படும். (235)
பொருள்: வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் - (தாம்) விரும்பியவற்றை விரும்பிய வாறு அடைதலால், செய் தவம் ஈண்டு முயல படும் - (அறிஞர்) செய்யும் தவத்தை இப் பிறப்பின்கண் (செய்தற்கு ஒவ்வொருவரும்) முயல வேண்டும்.
அகலம்: ‘வேண்டிய ஆங்கு’ என்பது அகரம் கெட்டு நின்றது. ‘செய் தவம்’ என்பதிலுள்ள செய் என்பதனைத் துணை வினையாகக் கொள்ளினும் அமையும்.
கருத்து: விரும்பியவற்றை யயல்லாம் தவம் தருமாகலான், அதனை விரைந்து செய்க.
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா
ரவஞ்செய்வா ராசையுட் பட்டு. (236)
பொருள்: தவம் செய்வாரே தம் கருமம் செய்வார் -தவத்தைச் செய்பவரே தமது கருமத்தைச் செய்பவர்; அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - தவஞ் செய்யாதார் ஆசையுட் சிக்கி வீண் கருமம் செய்பவர்.
அகலம்: கருமம் - வினை. செய்வாரே என்பதன் ஏகாரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. ‘மற்று’ அசை. தருமர், நச்சர் பாடம் ‘ஆசையுட் பட்டு’. மற்றை மூவர் பாடம் ‘ஆசையிற் பட்டு’.
கருத்து: தவஞ் செய்வாரே தம் கருமம் செய்தவராவர்.
சுடச்சுடரும் பொன்போ லொளிமிகுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (237)
பொருள்: துன்பம் சுட சுட நோற்கிற்பவர்க்கு -(தம்மைத்) துன்பம் வருத்த வருத்தத் தவஞ் செய்ய வல்லார்க்கு, சுட சுடரும் பொன்போல் ஒளி மிகும் - சுடுங் காலையில் ஒளிரும் பொன் போல (அறிவாகிய) ஒளி மிகும்.
அகலம்: முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘ஒளிவிடும்’. மணக்குடவர் பாடம் ‘சுடச் சுடப் பொன்போல’. ‘ஒளிவிடும்’ என்பதினும் ‘ஒளி மிகும்’ என்பது மிகப் பொருத்தமான பொருளைத் தருதலான், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.
கருத்து: தவம் செய்வார்க்கு அறிவு வளரும்.
தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். (238)
பொருள்: தன் உயிர் தான் அற பெற்றானை-தனது உயிர் ‘தான்’ என்பது நீங்கப் பெற்றவனை, ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் -மற்றைய நிலை பேறுடைய உயிர்களெல்லாம் வணங்கும்.
அகலம்: தான் -‘தான்’ என்று அகங்கரித்தல். ‘தன் உயிர்தான் அறப் பெற்றானை’ என்பதற்குத் ‘தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை’ என்ற உரை பொருந்தாது.
கருத்து: அகங்காரம் நீங்கப் பெற்றவன் கடவுளாகப் போற்றப் படுவான்.
கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி
னாற்ற றலைப்பட் டவர்க்கு. (239)
பொருள்: நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு -தவம் இழைத்தலின் வலிமையை அடைந்தார்க்கு, கூற்றம் குதித்தலும் கை கூடும் - கூற்றத்தைக் (கடந்து) குதித்தலும் எய்தும்.
அகலம்: கூற்றத்தைக் கடந்து குதித்தலாவது, கூற்றத்தினின்று தப்புதல். கூற்றம் ‡ எமன்.
கருத்து: தவத்தைச் செய்தவர் மரணத்தைக் கடப்பர்.
இலர்பல ராகிய காரண நோற்றார்
சிலர்பலர் நோலா தவர். (240)
பொருள்: இலர் பலர் ஆகிய காரணம் நோலாதவர் பலர் - (இவ் வுலகின்கண்) வறிஞர் பலராயதற்குக் காரணம் (முன்) தவம் இழையாதார் பலர் ; (உளர் சிலர் ஆகிய காரணம்) நோற்றார் சிலர் - (இவ் வுலகின்கண்) செல்வந்தர் சிலர் ஆயதற்குக் காரணம் (முன்) தவம் இழைத்தார் சிலர்.
அகலம்: ‘உளர் சிலர் ஆகிய காரணம்’ என்பது சொல்லெச்சம் ஆகியதற்குக் காரணத்தை ஆகிய காரணம் என்றார். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘ நோற் பார்’. ‘ஆகிய காரணம்’ என்று ஆசிரியர் கூறியிருத்தலான், ‘நோற்றார்’ என்பதே அவர் பாடம் என்று கொள்க.
கருத்து: தவம் செய்தலும் அது செய்யாமையும் முறையே செல்வத்திற்கும் வறுமைக்கும் காரணம்.
புலான் மறுத்தல்
இருபத்து மூன்றாம் அதிகாரம் - புலான் மறுத்தல்.
அஃதாவது, ஊன் (உணவை) விலக்கல். ‘புலால்’ ஆகுபெயர், அதனாலாய உணவுக்கு ஆயினமையால்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள். (221)
பொருள்: தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்- தன் (உடம்பாகிய) ஊனை வளர்த்தற்குத் தான் பிறிது (ஓர்) உயிரின் (உடம்பாகிய) ஊனை உண்பவன், அருள் எங்ஙனம் ஆளும் -அருளினை எவ்வாறு ஆள்வான்? (ஆளான்).
கருத்து: புலால் உண்பவனுக்கு அருள் உண்டாதல் இல்லை.
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு. (222)
பொருள்: பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை-செல்வத்தை (ஈட்டி) ஆளுந்தன்மை (அதனைப்) பேணாதவர்க்கு இல்லை ; ஆங்கு- அதுபோல, அருள் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை-அருளை (ஈட்டி) ஆளுந்தன்மை புலால் உண்பவர்க்கு இல்லை.
கருத்து: புலால் உண்பவர்பால் அருள் நிற்றல் இல்லை.
படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்ற
னுடல்சுவை யுண்டார் மனம். (223)
பொருள்: ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் -ஓர் உயிரின் உடம்பைச் சுவைப்பட உண்டவரது உள்ளம், படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது - (கையில்) படைக்கலத்தைக் கொண்டவரது நெஞ்சம் (நன்மை செய்ய எழாதது) போல நன்மை செய்ய எழாது.
அகலம்: பரிமேலழகர் பாடம் ‘ஒன்றன்’. மற்றை நால்வர் பாடம் ‘ஒன்றின்’.
கருத்து: புலால் உண்பவர் உள்ளம் தீமை செய்யவே எழும்.
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் றினல். (224)
பொருள்: அருள் யாது என்னின் கொல்லாமை -அருள் யாது என்றால் கொல்லாமை ; அல்லது யாது என்னின் கோறல் -அருளல்லது யாது என்றால் கொல்லுதல் ; பொருள் அல்லது அ ஊன் தின்னல்-அறம் அல்லாத செயல் (யாது என்னின்) கொலையால் வந்த ஊனை உண்ணுதல்.
அகலம்: ‘என்னின்’, ‘தின்னல்’ என்பன னகர வொற்றுக் கெட்டு நின்றன. பொருள் என்பது ஈண்டுப் பொருளாலாகும் அறத்தைக் குறித்து நின்றது. அறம் அல்லாத செயலாவது மறம்.
கொல்லாமை, கோறல் என்னும் காரியங்களை அருள், அருளல்லது என்னும் காரணங்களாகவும், ஊன் தினல் என்னும் காரணத்தை பொருளல்லது என்னும் காரியமாகவும் உபசரித்தார்.
கருத்து: புலால் உண்ணல் பாவம்.
உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்வ தளறு. (225)
பொருள்: உண்ணாமை உள்ளது உயிர்நிலை -(ஊன்) உண்ணாமையை உடைய உடம்பு உயிர்நிலை ; ஊன் உண்ண அண்ணாத்தல் செய்வது அளறு - ஊனை உண்பதற்காக வாயைத் திறக்கும் உடம்பு நரகம்.
அகலம்: ஊன் உண்பான் உடம்பு தீய ஊனை உட்கொள்ளுதலால், அவ் வுடம்பைத் தீய உயிர்களை உட்கொள்ளும் நரகத்துக்கு உவமித்தார். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘செய்யா தளறு’. ஒருவன் ஒன்றினை உட்கொள் ளுதற்காக அவாவுற்று வாய் திறத்தலைத் தான் அண் ணாத்தல் என்று சொல்வது வழக்கு. அன்றியும், ஒருவன் ஒருகால் ஊனை உட்கொள்ளின், அவனை அதற்காக நரகம் விழுங்குமெனவும், அவ்வாறு விழுங்கிய நரகம் அவனைப் பின்னர் ஒருகாலும் வெளிவிடாதெனவும் கூறின், அவன் ஊனுண்ணலை விடுதலா லாவது, வேறு பாவங்களை விடுதலா லாவது அடையும் பயன் யாது? ஒருவன் எத்துணைக் கொடிய பாவம் புரியினும், அவன் அதனைப் புரியாது நிறுத்திய மாத்திரத்திலே அப் பாவப் பயன் அவனைப் பற்றாது நீங்கிவிடுமெனக் கூறி, அப்பாவத்தை அவன் விடும்படியாகத் தூண்டுத லன்றோ நீதி நூல் இயற்றுவோர் கடமை? மேலும், ஊனுண்ணாமையை யுடைய உடம்பு உயிர் நிலை என்று கூறிய ஆசிரியர் ஊன் உண்ணுதலை யுடைய உடம்பு உயிர் நிலை யல்லாத வேறொன்று எனக் கூறுத லன்றோ இயற்கையும் பொருத்தமு மாகும்? ஆகலான், ‘ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு’ என்பது ஏடு பெயர்த் தெழுதியோனால் நேர்ந்த பிழை எனவும், ‘ஊனுண்ண அண்ணாத்தல் செய்வ தளறு’ என்பதே ஆசிரியர் பாடம் எனவும் கொள்க. அளறு என்பதற்குக் குழை சேறு என்று உரைப்பினும் அமையும். அதுவும் போகட்டவற்றை யயல்லாம் தன்னுள் ஏற்பதொன் றாகலான்.
கருத்து: ஊன் உண்ணும் உடம்பு நரகத்தை ஒக்கும்.
தினற்பொருட்டாற் கொள்ளா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில். (226)
பொருள்: உலகு தின்னல் பொருட்டு கொள்ளாது என்னின் - உலகத்தார் உண்ணுதற்காக (ஊனைக்) கொள்ளார் என்றால், விலை பொருட்டு ஊன் தருவார் யாரும் இல் -விலைக்காகப் புலாலை விற்பவர் எவரும் இல்லை.
அகலம்: உண்ணுதற்காக ஊனைக் கொள்ளுகின்றவர் உள்ள படியால் தான் பொருளுக்காக ஊனை விற்கின்றவரும் உள்ளார் என்றவாறு. உலகத்தாரை உலகம் என்றமையால், அதற்கேற்ப அதன் பயனிலையைக் கொள்ளாது என்று கூறினார்.‘ஆல்’இரண்டும் அசைகள். மணக்குடவர் பாடம் ‘கொள்ளா துல கெனின்’. மற்றை நால்வர் பாடம் ‘கொல்லா துலகெனின்’. ‘விலைப்பொருட்டா லூன்றருவா ரில்’ என்றமையால், ‘கொள்ளா துலகெனின்’ என்ற பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது.
கருத்து: புலால் உண்பார் இல்லையேல், புலால் விற்பாரும் இல்லை.
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின். (227)
பொருள்: புலால் உண்ணாமை வேண்டும் -(மாந்தர்) புலாலை உண்ணா திருத்தல் வேண்டும். அஃது உணர்வார்ப் பெறின் -புலால் அறிவுடையாரது ஆராய்ச்சியைப் பெறுமாயின், பிறிது ஒன்றன் புண் -பிறிது ஓர் பிராணியின் புண் (ஆம்).
அகலம்: அஃது என்பது ஆய்தம் கெட்டு நின்றது. உணர்வாரது ஆராய்ச்சி யைப் பெறின் என்பதை உணர்வாரைப் பெறின் என்றார். அகர அளபெடை இசை நிறைக்க வந்தது. மணக்குடவர் பாடம் ‘புலாலை’.
கருத்து: புலால் ஒரு பிராணியின் புண் ; ஆகலான், அதனை உண்ணற்க.
செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா
ருயிரிற் றலைப்பிரிந்த வூன். (228)
பொருள்: உயிரின் தலைப்பிரிந்த ஊன் -(ஓர்) உயிரினின்று நீங்கிய ஊனை, செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் -குற்றத்தினின்று நீங்கிய அறிவினை யுடையார் உண்ணார்.
கருத்து: அறிவுடையார் புலாலை உண்ணார்.
அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று. (229)
பொருள்: ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை - ஒரு பிராணியின் உயிரை அழித்து (அதனால் வந்த ஊனை) உண்ணாதிருத்தல், அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் நன்று‡ நெய்யை வார்த்து ஆயிரம் வேள்வி செய்தலினும் நன்மை.
அகலம்: வார்த்தல்- ஊற்றல். பரிமேலழகர் பாடம் ‘ஒன்றன்’. மற்றை நால்வர் பாடம் ‘ஒன்றின்’.
கருத்து: அவி சொரிந்து ஆயிரம் வேட்டலினும் புலாலுண்ணாமை நன்று.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யயல்லா வுயிருந் தொழும். (230)
பொருள்: கொல்லான் புலாலை மறுத்தானை -(ஓர் உயிரையும்) கொல்லாத வனாய்ப் புலாலை விலக்கியவனை, எல்லா உயிரும் கை கூப்பி தொழும் -எல்லா உயிர்களும் கைகளைக் குவித்து வணங்கும்.
அகலம்: கைகூப்பித் தொழுதல் மனிதர்க்கே உரியதாயினும், அதனை உபசார வழக்காக ஏனைய உயிர்களின் மேலும் ஏற்றிக் கூறினார். உயிரைக் கொல்லாமலும் புலாலைக் கொள்ளாமலும் இருக்கும் மனிதன் எல்லா உயிர்களாலும் கடவுளாகப் போற்றப்படுவன் என்ற வாறு.
கருத்து: கொலையும் புலையும் நீத்தோன் கடவுளை ஒப்பன்.
அஃதாவது, ஊன் (உணவை) விலக்கல். ‘புலால்’ ஆகுபெயர், அதனாலாய உணவுக்கு ஆயினமையால்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள். (221)
பொருள்: தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்- தன் (உடம்பாகிய) ஊனை வளர்த்தற்குத் தான் பிறிது (ஓர்) உயிரின் (உடம்பாகிய) ஊனை உண்பவன், அருள் எங்ஙனம் ஆளும் -அருளினை எவ்வாறு ஆள்வான்? (ஆளான்).
கருத்து: புலால் உண்பவனுக்கு அருள் உண்டாதல் இல்லை.
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு. (222)
பொருள்: பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை-செல்வத்தை (ஈட்டி) ஆளுந்தன்மை (அதனைப்) பேணாதவர்க்கு இல்லை ; ஆங்கு- அதுபோல, அருள் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை-அருளை (ஈட்டி) ஆளுந்தன்மை புலால் உண்பவர்க்கு இல்லை.
கருத்து: புலால் உண்பவர்பால் அருள் நிற்றல் இல்லை.
படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்ற
னுடல்சுவை யுண்டார் மனம். (223)
பொருள்: ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் -ஓர் உயிரின் உடம்பைச் சுவைப்பட உண்டவரது உள்ளம், படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது - (கையில்) படைக்கலத்தைக் கொண்டவரது நெஞ்சம் (நன்மை செய்ய எழாதது) போல நன்மை செய்ய எழாது.
அகலம்: பரிமேலழகர் பாடம் ‘ஒன்றன்’. மற்றை நால்வர் பாடம் ‘ஒன்றின்’.
கருத்து: புலால் உண்பவர் உள்ளம் தீமை செய்யவே எழும்.
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் றினல். (224)
பொருள்: அருள் யாது என்னின் கொல்லாமை -அருள் யாது என்றால் கொல்லாமை ; அல்லது யாது என்னின் கோறல் -அருளல்லது யாது என்றால் கொல்லுதல் ; பொருள் அல்லது அ ஊன் தின்னல்-அறம் அல்லாத செயல் (யாது என்னின்) கொலையால் வந்த ஊனை உண்ணுதல்.
அகலம்: ‘என்னின்’, ‘தின்னல்’ என்பன னகர வொற்றுக் கெட்டு நின்றன. பொருள் என்பது ஈண்டுப் பொருளாலாகும் அறத்தைக் குறித்து நின்றது. அறம் அல்லாத செயலாவது மறம்.
கொல்லாமை, கோறல் என்னும் காரியங்களை அருள், அருளல்லது என்னும் காரணங்களாகவும், ஊன் தினல் என்னும் காரணத்தை பொருளல்லது என்னும் காரியமாகவும் உபசரித்தார்.
கருத்து: புலால் உண்ணல் பாவம்.
உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்வ தளறு. (225)
பொருள்: உண்ணாமை உள்ளது உயிர்நிலை -(ஊன்) உண்ணாமையை உடைய உடம்பு உயிர்நிலை ; ஊன் உண்ண அண்ணாத்தல் செய்வது அளறு - ஊனை உண்பதற்காக வாயைத் திறக்கும் உடம்பு நரகம்.
அகலம்: ஊன் உண்பான் உடம்பு தீய ஊனை உட்கொள்ளுதலால், அவ் வுடம்பைத் தீய உயிர்களை உட்கொள்ளும் நரகத்துக்கு உவமித்தார். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘செய்யா தளறு’. ஒருவன் ஒன்றினை உட்கொள் ளுதற்காக அவாவுற்று வாய் திறத்தலைத் தான் அண் ணாத்தல் என்று சொல்வது வழக்கு. அன்றியும், ஒருவன் ஒருகால் ஊனை உட்கொள்ளின், அவனை அதற்காக நரகம் விழுங்குமெனவும், அவ்வாறு விழுங்கிய நரகம் அவனைப் பின்னர் ஒருகாலும் வெளிவிடாதெனவும் கூறின், அவன் ஊனுண்ணலை விடுதலா லாவது, வேறு பாவங்களை விடுதலா லாவது அடையும் பயன் யாது? ஒருவன் எத்துணைக் கொடிய பாவம் புரியினும், அவன் அதனைப் புரியாது நிறுத்திய மாத்திரத்திலே அப் பாவப் பயன் அவனைப் பற்றாது நீங்கிவிடுமெனக் கூறி, அப்பாவத்தை அவன் விடும்படியாகத் தூண்டுத லன்றோ நீதி நூல் இயற்றுவோர் கடமை? மேலும், ஊனுண்ணாமையை யுடைய உடம்பு உயிர் நிலை என்று கூறிய ஆசிரியர் ஊன் உண்ணுதலை யுடைய உடம்பு உயிர் நிலை யல்லாத வேறொன்று எனக் கூறுத லன்றோ இயற்கையும் பொருத்தமு மாகும்? ஆகலான், ‘ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு’ என்பது ஏடு பெயர்த் தெழுதியோனால் நேர்ந்த பிழை எனவும், ‘ஊனுண்ண அண்ணாத்தல் செய்வ தளறு’ என்பதே ஆசிரியர் பாடம் எனவும் கொள்க. அளறு என்பதற்குக் குழை சேறு என்று உரைப்பினும் அமையும். அதுவும் போகட்டவற்றை யயல்லாம் தன்னுள் ஏற்பதொன் றாகலான்.
கருத்து: ஊன் உண்ணும் உடம்பு நரகத்தை ஒக்கும்.
தினற்பொருட்டாற் கொள்ளா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில். (226)
பொருள்: உலகு தின்னல் பொருட்டு கொள்ளாது என்னின் - உலகத்தார் உண்ணுதற்காக (ஊனைக்) கொள்ளார் என்றால், விலை பொருட்டு ஊன் தருவார் யாரும் இல் -விலைக்காகப் புலாலை விற்பவர் எவரும் இல்லை.
அகலம்: உண்ணுதற்காக ஊனைக் கொள்ளுகின்றவர் உள்ள படியால் தான் பொருளுக்காக ஊனை விற்கின்றவரும் உள்ளார் என்றவாறு. உலகத்தாரை உலகம் என்றமையால், அதற்கேற்ப அதன் பயனிலையைக் கொள்ளாது என்று கூறினார்.‘ஆல்’இரண்டும் அசைகள். மணக்குடவர் பாடம் ‘கொள்ளா துல கெனின்’. மற்றை நால்வர் பாடம் ‘கொல்லா துலகெனின்’. ‘விலைப்பொருட்டா லூன்றருவா ரில்’ என்றமையால், ‘கொள்ளா துலகெனின்’ என்ற பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது.
கருத்து: புலால் உண்பார் இல்லையேல், புலால் விற்பாரும் இல்லை.
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின். (227)
பொருள்: புலால் உண்ணாமை வேண்டும் -(மாந்தர்) புலாலை உண்ணா திருத்தல் வேண்டும். அஃது உணர்வார்ப் பெறின் -புலால் அறிவுடையாரது ஆராய்ச்சியைப் பெறுமாயின், பிறிது ஒன்றன் புண் -பிறிது ஓர் பிராணியின் புண் (ஆம்).
அகலம்: அஃது என்பது ஆய்தம் கெட்டு நின்றது. உணர்வாரது ஆராய்ச்சி யைப் பெறின் என்பதை உணர்வாரைப் பெறின் என்றார். அகர அளபெடை இசை நிறைக்க வந்தது. மணக்குடவர் பாடம் ‘புலாலை’.
கருத்து: புலால் ஒரு பிராணியின் புண் ; ஆகலான், அதனை உண்ணற்க.
செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா
ருயிரிற் றலைப்பிரிந்த வூன். (228)
பொருள்: உயிரின் தலைப்பிரிந்த ஊன் -(ஓர்) உயிரினின்று நீங்கிய ஊனை, செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் -குற்றத்தினின்று நீங்கிய அறிவினை யுடையார் உண்ணார்.
கருத்து: அறிவுடையார் புலாலை உண்ணார்.
அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று. (229)
பொருள்: ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை - ஒரு பிராணியின் உயிரை அழித்து (அதனால் வந்த ஊனை) உண்ணாதிருத்தல், அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் நன்று‡ நெய்யை வார்த்து ஆயிரம் வேள்வி செய்தலினும் நன்மை.
அகலம்: வார்த்தல்- ஊற்றல். பரிமேலழகர் பாடம் ‘ஒன்றன்’. மற்றை நால்வர் பாடம் ‘ஒன்றின்’.
கருத்து: அவி சொரிந்து ஆயிரம் வேட்டலினும் புலாலுண்ணாமை நன்று.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யயல்லா வுயிருந் தொழும். (230)
பொருள்: கொல்லான் புலாலை மறுத்தானை -(ஓர் உயிரையும்) கொல்லாத வனாய்ப் புலாலை விலக்கியவனை, எல்லா உயிரும் கை கூப்பி தொழும் -எல்லா உயிர்களும் கைகளைக் குவித்து வணங்கும்.
அகலம்: கைகூப்பித் தொழுதல் மனிதர்க்கே உரியதாயினும், அதனை உபசார வழக்காக ஏனைய உயிர்களின் மேலும் ஏற்றிக் கூறினார். உயிரைக் கொல்லாமலும் புலாலைக் கொள்ளாமலும் இருக்கும் மனிதன் எல்லா உயிர்களாலும் கடவுளாகப் போற்றப்படுவன் என்ற வாறு.
கருத்து: கொலையும் புலையும் நீத்தோன் கடவுளை ஒப்பன்.
அருளுடைமை
துறவற வியல்
இது, துறவு, அறம், இயல் என்னும் மூன்று சொற்களா லாய தொடர்மொழி. துறவு-(இல் வாழ்க்கையைத்) துறத்தல். அறம் - தருமம். இயல் - இயல்பு. ஆகவே, அத் தொடர்மொழி இல்வாழ்க்கையைத் துறந்தார்களது அறங்களின் இயல்பு எனப் பொருள்படும்.
இருபத்திரண்டாம் அதிகாரம் - அருளுடைமை.
அஃதாவது, உயிர்கள்மாட்டுக் கருணை யுடைமை.
அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள. (211)
பொருள்: அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் -அருளாகிய செல்வம் செல்வத்து ளெல்லாம் (சிறந்த) செல்வம் ; பொருள் செல்வம் பூரியார்கண்ணும் உள - பொருளாகிய செல்வங்கள் கீழ் மக்களிடத்தும் உள்ளன.
அகலம்: அருள் -தண்ணளி‡கருணை. அதனை வட நூலார் ‘கிருபை’, ‘காருண்யம்’ என்பர்.
கருத்து: அருளுடைமை செல்வத்து ளெல்லாம் சிறந்த செல்வம்.
நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை. (212)
பொருள்: நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க -(ஒருவன்) நல்ல நெறியின்கண் நின்று விரும்பி அருளை ஆள்க ; பல் ஆற்றால் தேரினும் அஃதே துணை - பல வழிகளால் ஆராயினும் அருளே (மக்களுயிர்க்குத்) துணை.
அகலம்: அருளை ஆளுதல்‡உயிர்களிடத்துக் கருணை செலுத்துதல். நல்லாற்றான் என்பது வேற்றுமை மயக்கம், மூன்றாம் வேற்றுமை யுருபு ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தமையான். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. தருமர்,தாமத்தர் பாடம் ‘தேறினும்’.
கருத்து: வீட்டினை அடைவதற்கு அருளே துணை.
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த
வின்னா வுலகம் புகல். (213)
பொருள்: இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் -இருள் பொருந்திய துன்ப உலகின்கண் புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை-அருள் பொருந்திய மனத்தை யுடையார்க்கு இல்லை.
அகலம்: இருள் பொருந்திய துன்ப உலகமாவது, நரகம்.
கருத்து: அருளுடையார்க்கு நரகம் இல்லை.
மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை. (214)
பொருள்: தன் உயிர் அஞ்சும் வினை - தனது உயிர் அஞ்சும்படியான செயல், மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு இல் என்ப (ஆன்றோர்) - நிலை பேறுடைய உயிர்களைப் பேணி அருளினை ஆள்பவனுக்கு இல்லை என்பர் ஆன்றோர்.
கருத்து: அரு ளுடையார்க்கு அச்சம் இல்லை.
அல்ல லருளாள்வார்க் கில்லை வழிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி. (215)
பொருள்: அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளினை ஆள்பவ ருக்குத் துன்பம் இல்லை; வழி வழங்கும் மல்லன் மா ஞாலம் கரி-(அதற்கு அற) நெறிகளை (உள்ளவாறு) உணர்த்தும் (அறிவு) வளம், பொருந்திய பெருமை நிறைந்த மெய்ஞ்ஞானிகளே சாட்சிகள்.
அகலம்: ‘உலக மென்ப துயர்ந்தோர் மாட்டே’ என்றும், ‘ஞானிக் கில்லை யின்பமுந் துன்பமு’ம் என்றும் ஆன்றோர் கூறியிருத்தலான், மா ஞாலம் என்பதற்குப் பெருமை நிறைந்த மெய்ஞ் ஞானிகள் என்று பொருள் உரைக்கப் பட்டது. அற நெறிகளை விதிக்கத் தக்கோர் மெய்ஞ் ஞானிகளே. அவர்கள் அருளுடையவர்களென்பது யாவர்க்கும் ஒப்ப முடிந்ததொன்று. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘வளிவழங்கு மல்லன் மா ஞாலங் கரி’. அரு ளாள்வார்க்கு அல்லல் இல்லை யயன்பதை உலகத்தார் அறிய முடியா தாகலானும், மெய்ஞ் ஞானிகளுக்கு அல்லல் இல்லை யயன்பதை அவரைக் காண்பவர் யாரும் அறியக் கூடுமாகலானும், ‘வழிவழங்கு மல்லன்மா ஞாலங்கரி’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.
கருத்து: அருளுடையார்க்குத் துன்பம் இல்லை என்பதற்கு மெஞ்ஞானி சான்று.
பொருணீங்கிப் பொச்சாந்தா ரென்ப ரருணீங்கி
யல்லவை செய்தொழுகு வார். (216)
பொருள்: அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - அருளினின்று நீங்கிப் பாவங்களைச் செய்து நடப்பவர், பொருள் நீங்கி பொச்சாந்தார் என்ப - மெய்ப் பொருளினின்று நீங்கி (அதனை) மறந்தார் என்பர் (ஆன்றோர்).
அகலம்: தாமத்தர், நச்சர் பாடம் ‘பொய்ச்சாந்தார்’.
கருத்து:அருளை நீத்தவர் மெய்ப்பொருளை நீத்தவராவர்.
அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு. (217)
பொருள்: பொருள் இல்லார்க்கு இ உலகம் இல்லாகி ஆங்கு‡ பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லையாயினாற் போல, அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை-அருள் இல்லாதார்க்கு அவ்வுலக இன்பம் இல்லை.
அகலம்: ‘இல்லாகி யாங்கு’ என்பது வினையயச்சத் தொகை. ‘இல்லாகிய ஆங்கு’ என்பது அகரம் கெட்டு நின்றது எனினும், அமையும், உலகம் இரண்டும் ஆகுபெயர், அவற்றின் இன்பங்களுக்கு ஆயினமையால். பரிமேலழகர் பாடம் ‘இல்லாதி யாங்கு’. அது பிழைபட்ட பாடம்.
கருத்து: அருள் இல்லார்க்கு வீட்டுலகம் இல்லை.
பொருளற்றார் பூப்ப ரொருகா லருளற்றா
ரற்றார்மற் றாத லரிது. (218)
பொருள்: பொருள் அற்றார் ஒரு கால் பூப்பர்-செல்வத்தை இழந்தவர் ஒரு காலத்தில் செல்வ முடையவ ராவர் ; அருள் அற்றார் அற்றார் - அருளை இழந்தவர் (அதனை) இழந்தவரே ; மற்று ஆதல் அரிது - பின்னர் அருளுடையவ ராதல் அரிது.
அகலம்: ‘அரிது’ என்பது ஈண்டு அருமைப் பொருளின் மேல் நின்றது. அருளை ஒரு காலும் கைவிட லாகா தென்று வற்புறுத்தற்காக, அருளைக் கைவிடின் அதனைப் பின்னர் அடைதல் அரிது என்றார்.
கருத்து: அருளை விடுத்தவர் மறுபடி அதனை அடைதல் அரிது.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி
னருளாதான் செய்யு மறம். (219)
பொருள்: அருளாதான் செய்யும் அறம் - அருளில்லாதவன் செய்யும் அறம், தேரின்-ஆராயின், தெருளாதான் மெய்ப் பொருள் கண்டு அற்று - தெளி வில்லாதவன் மெய்ப்பொருளை அறிந்தாற் போலும்.
அகலம்: தெருளாதான் மெய்ப்பொருள் காண்டலு மில்லை; அருளா தான்அறம் புரிதலுமில்லை என்றவாறு. ‘கற்றானுங் கற்றார் வாய்க் கேட்டானு மில்லாதார், தெற்ற வுணரார் பொருள்களை-எற்றேல், அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை, நாவற்கீழ்ப் பெற்ற கனி’ - பழமொழி நானூறு.
கருத்து: அருள் இல்லாதான் அறம் புரியான்.
வலியார்முற் றன்னை நினைக்கதான் றன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து. (220)
பொருள்: தன்னின் மெலியார்மேல் தான் செல்லும் இடத்து - தன்னினும் மெலியவர்மேல் தான் (வெகுண்டு) செல்லுங் காலையில், வலியார்முன் தன்னை நினைக்க‡(தன் மேல் வெகுண்டுவரும்) வலியார் முன் தன் நிலையை நினைக்கக் கடவன்.
அகலம்: தன்னின் வலியார் தன்மேல் வெகுண்டு வருங்கால் அவர் முன் தான்நடுங்கி நிற்றலை நினைக்கவே, தான் தன்னின் மெலியார்மேல் வெகுண்டு செல்லான் என்றவாறு. தன்னை என்பது ஆகு பெயர், தன் நிலைக்கு ஆயினமையால். தன் நிலை - தான் நிற்கும் நிலை. மெலியார்-செல்வம் முதலியவற்றால் எளியவர்.
கருத்து: இஃது அருளை அடைதற்கு வழி கூறிற்று.
இது, துறவு, அறம், இயல் என்னும் மூன்று சொற்களா லாய தொடர்மொழி. துறவு-(இல் வாழ்க்கையைத்) துறத்தல். அறம் - தருமம். இயல் - இயல்பு. ஆகவே, அத் தொடர்மொழி இல்வாழ்க்கையைத் துறந்தார்களது அறங்களின் இயல்பு எனப் பொருள்படும்.
இருபத்திரண்டாம் அதிகாரம் - அருளுடைமை.
அஃதாவது, உயிர்கள்மாட்டுக் கருணை யுடைமை.
அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள. (211)
பொருள்: அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் -அருளாகிய செல்வம் செல்வத்து ளெல்லாம் (சிறந்த) செல்வம் ; பொருள் செல்வம் பூரியார்கண்ணும் உள - பொருளாகிய செல்வங்கள் கீழ் மக்களிடத்தும் உள்ளன.
அகலம்: அருள் -தண்ணளி‡கருணை. அதனை வட நூலார் ‘கிருபை’, ‘காருண்யம்’ என்பர்.
கருத்து: அருளுடைமை செல்வத்து ளெல்லாம் சிறந்த செல்வம்.
நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை. (212)
பொருள்: நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க -(ஒருவன்) நல்ல நெறியின்கண் நின்று விரும்பி அருளை ஆள்க ; பல் ஆற்றால் தேரினும் அஃதே துணை - பல வழிகளால் ஆராயினும் அருளே (மக்களுயிர்க்குத்) துணை.
அகலம்: அருளை ஆளுதல்‡உயிர்களிடத்துக் கருணை செலுத்துதல். நல்லாற்றான் என்பது வேற்றுமை மயக்கம், மூன்றாம் வேற்றுமை யுருபு ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தமையான். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. தருமர்,தாமத்தர் பாடம் ‘தேறினும்’.
கருத்து: வீட்டினை அடைவதற்கு அருளே துணை.
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த
வின்னா வுலகம் புகல். (213)
பொருள்: இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் -இருள் பொருந்திய துன்ப உலகின்கண் புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை-அருள் பொருந்திய மனத்தை யுடையார்க்கு இல்லை.
அகலம்: இருள் பொருந்திய துன்ப உலகமாவது, நரகம்.
கருத்து: அருளுடையார்க்கு நரகம் இல்லை.
மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை. (214)
பொருள்: தன் உயிர் அஞ்சும் வினை - தனது உயிர் அஞ்சும்படியான செயல், மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு இல் என்ப (ஆன்றோர்) - நிலை பேறுடைய உயிர்களைப் பேணி அருளினை ஆள்பவனுக்கு இல்லை என்பர் ஆன்றோர்.
கருத்து: அரு ளுடையார்க்கு அச்சம் இல்லை.
அல்ல லருளாள்வார்க் கில்லை வழிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி. (215)
பொருள்: அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளினை ஆள்பவ ருக்குத் துன்பம் இல்லை; வழி வழங்கும் மல்லன் மா ஞாலம் கரி-(அதற்கு அற) நெறிகளை (உள்ளவாறு) உணர்த்தும் (அறிவு) வளம், பொருந்திய பெருமை நிறைந்த மெய்ஞ்ஞானிகளே சாட்சிகள்.
அகலம்: ‘உலக மென்ப துயர்ந்தோர் மாட்டே’ என்றும், ‘ஞானிக் கில்லை யின்பமுந் துன்பமு’ம் என்றும் ஆன்றோர் கூறியிருத்தலான், மா ஞாலம் என்பதற்குப் பெருமை நிறைந்த மெய்ஞ் ஞானிகள் என்று பொருள் உரைக்கப் பட்டது. அற நெறிகளை விதிக்கத் தக்கோர் மெய்ஞ் ஞானிகளே. அவர்கள் அருளுடையவர்களென்பது யாவர்க்கும் ஒப்ப முடிந்ததொன்று. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘வளிவழங்கு மல்லன் மா ஞாலங் கரி’. அரு ளாள்வார்க்கு அல்லல் இல்லை யயன்பதை உலகத்தார் அறிய முடியா தாகலானும், மெய்ஞ் ஞானிகளுக்கு அல்லல் இல்லை யயன்பதை அவரைக் காண்பவர் யாரும் அறியக் கூடுமாகலானும், ‘வழிவழங்கு மல்லன்மா ஞாலங்கரி’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.
கருத்து: அருளுடையார்க்குத் துன்பம் இல்லை என்பதற்கு மெஞ்ஞானி சான்று.
பொருணீங்கிப் பொச்சாந்தா ரென்ப ரருணீங்கி
யல்லவை செய்தொழுகு வார். (216)
பொருள்: அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - அருளினின்று நீங்கிப் பாவங்களைச் செய்து நடப்பவர், பொருள் நீங்கி பொச்சாந்தார் என்ப - மெய்ப் பொருளினின்று நீங்கி (அதனை) மறந்தார் என்பர் (ஆன்றோர்).
அகலம்: தாமத்தர், நச்சர் பாடம் ‘பொய்ச்சாந்தார்’.
கருத்து:அருளை நீத்தவர் மெய்ப்பொருளை நீத்தவராவர்.
அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு. (217)
பொருள்: பொருள் இல்லார்க்கு இ உலகம் இல்லாகி ஆங்கு‡ பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லையாயினாற் போல, அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை-அருள் இல்லாதார்க்கு அவ்வுலக இன்பம் இல்லை.
அகலம்: ‘இல்லாகி யாங்கு’ என்பது வினையயச்சத் தொகை. ‘இல்லாகிய ஆங்கு’ என்பது அகரம் கெட்டு நின்றது எனினும், அமையும், உலகம் இரண்டும் ஆகுபெயர், அவற்றின் இன்பங்களுக்கு ஆயினமையால். பரிமேலழகர் பாடம் ‘இல்லாதி யாங்கு’. அது பிழைபட்ட பாடம்.
கருத்து: அருள் இல்லார்க்கு வீட்டுலகம் இல்லை.
பொருளற்றார் பூப்ப ரொருகா லருளற்றா
ரற்றார்மற் றாத லரிது. (218)
பொருள்: பொருள் அற்றார் ஒரு கால் பூப்பர்-செல்வத்தை இழந்தவர் ஒரு காலத்தில் செல்வ முடையவ ராவர் ; அருள் அற்றார் அற்றார் - அருளை இழந்தவர் (அதனை) இழந்தவரே ; மற்று ஆதல் அரிது - பின்னர் அருளுடையவ ராதல் அரிது.
அகலம்: ‘அரிது’ என்பது ஈண்டு அருமைப் பொருளின் மேல் நின்றது. அருளை ஒரு காலும் கைவிட லாகா தென்று வற்புறுத்தற்காக, அருளைக் கைவிடின் அதனைப் பின்னர் அடைதல் அரிது என்றார்.
கருத்து: அருளை விடுத்தவர் மறுபடி அதனை அடைதல் அரிது.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி
னருளாதான் செய்யு மறம். (219)
பொருள்: அருளாதான் செய்யும் அறம் - அருளில்லாதவன் செய்யும் அறம், தேரின்-ஆராயின், தெருளாதான் மெய்ப் பொருள் கண்டு அற்று - தெளி வில்லாதவன் மெய்ப்பொருளை அறிந்தாற் போலும்.
அகலம்: தெருளாதான் மெய்ப்பொருள் காண்டலு மில்லை; அருளா தான்அறம் புரிதலுமில்லை என்றவாறு. ‘கற்றானுங் கற்றார் வாய்க் கேட்டானு மில்லாதார், தெற்ற வுணரார் பொருள்களை-எற்றேல், அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை, நாவற்கீழ்ப் பெற்ற கனி’ - பழமொழி நானூறு.
கருத்து: அருள் இல்லாதான் அறம் புரியான்.
வலியார்முற் றன்னை நினைக்கதான் றன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து. (220)
பொருள்: தன்னின் மெலியார்மேல் தான் செல்லும் இடத்து - தன்னினும் மெலியவர்மேல் தான் (வெகுண்டு) செல்லுங் காலையில், வலியார்முன் தன்னை நினைக்க‡(தன் மேல் வெகுண்டுவரும்) வலியார் முன் தன் நிலையை நினைக்கக் கடவன்.
அகலம்: தன்னின் வலியார் தன்மேல் வெகுண்டு வருங்கால் அவர் முன் தான்நடுங்கி நிற்றலை நினைக்கவே, தான் தன்னின் மெலியார்மேல் வெகுண்டு செல்லான் என்றவாறு. தன்னை என்பது ஆகு பெயர், தன் நிலைக்கு ஆயினமையால். தன் நிலை - தான் நிற்கும் நிலை. மெலியார்-செல்வம் முதலியவற்றால் எளியவர்.
கருத்து: இஃது அருளை அடைதற்கு வழி கூறிற்று.
புகழ்
இருபத்தொன்றாம் அதிகாரம் - புகழ்
அஃதாவது, (ஒருவனை அறிவுடையார்) உயர்த்துக் கூறும் மொழி.
ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு. (201)
பொருள்: ஈதல் இசை பட வாழ்தல்-(ஒருவன்) ஈதலால் புகழ் உண்டாகும்படி வாழக் கடவன்; அஃது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை - புகழ் அல்லாமல் (மனித) உயிர்க்கு ஊதியம் (வேறு) இல்லை.
அகலம்: ஈதல் என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகை. அஃது என்பது செய்யுள் விகாரத்தால் ஆய்தம் கெட்டு நின்றது. ஊதியம் - இலாபம். தருமர் பாடம் ‘அவையல்ல’.
கருத்து: இல்லார்க்கு ஈந்து புகழ் பெறுதல் எய்தற்கரிய இம்மைப் பேறு.
உரைப்பா ருரைப்பவை யயல்லா மிரப்பார்க்கொன்
றீவார்மே னிற்கும் புகழ். (202)
பொருள்: உரைப்பார் உரைப்பவை எல்லாம் - சொல்வோர் சொல்வன வெல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழே- இரப்பவர்க்கு (அவர் விரும்பியது) ஒன்றைக் கொடுப்பவர் மேல் நிற்கும் புகழ்களே.
அகலம்: பிரிநிலை ஏகாரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. தன்னினம் கோடல் என்னும் உத்தியால், உரைப்பார் என்பது பாடுவோரையும் அடக்கி நின்றது.
கருத்து: ஈவோர் எல்லாராலும் புகழப்படுவர்.
ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில். (203)
பொருள்: உலகத்து ஒன்றா(க) உயர்ந்த புகழ் அல்லால் - உலகத்தின் கண் ஒப்பற்றதாக உயர்ந்த புகழ் அல்லாமல், பொன்றாது நிற்பது ஒன்று இல் - (என்றும்) அழியாது நிற்பது (வேறு) ஒன்று இல்லை.
அகலம்: ஒன்றாக என்பது செய்யுள் விகாரத்தால் ஈறு கெட்டு நின்றது. ஒருவன் பொன்றுங்கால், அவன் புகழ் பொன்றாது நிற்கும் என்றார். ‘மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே’ - புறநானூறு.
கருத்து: இவ் வுலகத்தின்கண் என்றும் பொன்றாது நிற்பது ஒப்பற்று உயர்ந்த புகழே.
நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு. (204)
பொருள்: நிலவரை நீள் புகழ் ஆற்றின் - நிலவுலகின் அளவு (வரையில்) நீண்டு நிற்கும் புகழை (ஒருவன்) செய்யின், புத்தேள் உலகு புலவரைப் போற்றாது‡ தெய்வ உலகத்தார் புலவரைப் போற்றார்.
அகலம்: நீள் என்பது வினைத் தொகை. உலகு என்பது ஆகு பெயர், உலகினர்க்கு ஆயினமையால். உலகு என்றமையால் அதற்கு ஏற்ப அதன் பயனிலையைப் போற்றாது என்று கூறினார். புகழ் செய்தோரைப் பாடிய புலவரைப் போற்றாமல் அவர் பாடிய பாட்டுடைத் தலைவரையே தேவர் போற்றுவர் என்றவாறு. இதனால், புலவர் தேவரால் போற்றப்படுதற் குரிய ரென்பது பெற்றாம்.
கருத்து: புகழ் செய்தாரைத் தேவரும் போற்றுவர்.
நத்தம்போர் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது. (205)
பொருள்: நத்தம் போர் கேடும் - ஆக்கத்தைப் போர்த்த கேடும் உள்ளது ஆகும் சாக்காடும் -(என்றும்) உள்ளது ஆகும் சாவும், வித்தகர்க்கு அல்லால் (ஏனையோர்க்கு) அரிது -அறிஞர்க்கு அல்லாமல் மற்றையோர்க்கு (ச் செய்தல்) இயலாது.
அகலம்: ஈகை தோற்ற மாத்திரையில் பொருட் கேட்டையும், உண்மையில் பொரு ளாக்கத்தையும் நல்குவதால், அதனை ‘நத்தம் போர் கேடு’ என்றார். பிறர் நன்மைக்காக உயிரை வழங்குதல் தோற்ற மாத்திரையில் சாவையும் உண்மையில் (புகழுடம்போடு கூடி) என்றும் உள்ளதாம் தன்மையையும் நல்குவதால் அதனை (‘உளதாகும் சாக்காடு’) என்றார். ‘உள்ளதாகும்’ என்பது ‘ள’கர வொற்றுக் கெட்டு நின்றது. ‘போர்’ என்பது வினைத்தொகை. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘நத்தம்போற்’. இக் குறளின் மூன்றாஞ் சீரின் முதற் சொல்லாகிய ‘உளது’ என்பது ‘ஆகும்’என்னும் ஆக்கச் சொல்லைக் கொண்டு நிற்றல் போல, இக் குறளின் முதற் சீரின் முதற் சொல்லாகிய ‘நத்தம்’ என்பதும் ‘ஆம்’ அல்லது ‘போர்’ என்பது போன்ற பொருள் தரும் ஒரு சொல்லோடு சேர்ந்து நிற்றல் பொருள் கோளுக்கு இன்றியமையாததா யிருக்க, அச் சொல்லை விடுத்துப் பொருள் கோளுக்கு வேண்டாத ‘போல்’ என்னும் உரையசைச் சொல்லைச் சேர்த்துப் புலவரெவரும் பாடாராகலின், ‘நத்தம்போற்’ என்பது ஏடு பெயர்த் தெழுதியோனால் நேர்ந்த பிழையயனக் கொள்க. ‘மாய்ந்தவர் மாய்ந்தவ ரல்லர்கண் மாயா, தேந்திய கைகொ டிரந்தவ ரெந்தாய், வீய்ந்தவ ரென்பர் வீய்ந்தவ ரேனும், ஈய்ந்தவ ரல்ல திருந்தவர் யாரே’ - கம்ப ராமாயணம்.
கருத்து: பிறருக்கு ஈவோரும் பிறருக்காக உயிர் வழங்குவோரும் பெரியர்.
தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றிலிற் றோன்றாமை நன்று. (206)
பொருள்: தோன்றின் புகழொடு தோன்றுக - (ஒருவன் பல்லார்முன்) தோன்றில் புகழுடன் தோன்றுக; அஃது இல்லார் தோன்றலின் தோன்றாமை நன்று- புகழ் இல்லாதார் (பல்லார் முன்) தோன்றுதலினும் தோன்றா திருத்தல் நன்மை.
அகலம்: ‘தோன்றல்’ என்பதற்கு ‘பிறத்தல்’ என்று பொருள் உரைப்பாரும் உளர். பிறத்தலும் பிறவாதிருத்தலும் ஒருவன் விருப்பப்படி நிகழ்வன அல்ல ; அவன் முன் வினைப்படியே நிகழ்வன. ஆகலான், அவ்வுரை பொருந்தாது.
கருத்து: புகழ் செய்யாதார் தம் வீட்டை விட்டு வெளியேறாமை நன்று.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
யிகழ்வாரை நோவ தெவன். (207)
பொருள்: புகழ் பட வாழாதார் - புகழ் உண்டாகும்படியாக வாழாதவர், தம் நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்‡ தம்மை நோவாதவராய்த் தம்மை இகழ்வாரை நோவது யாது காரணத்தால்?
கருத்து: புகழ் செய்யாதார் தம்மை இகழ்வாரை நோவலாகாது.
வசையயன்ப வையத்தார்க் கெல்லா மிசையயன்னு
மெச்சம் பெறாஅ விடின். (208)
பொருள்: இசை என்னும் எச்சம் பெறா(து) விடின் ‡புகழ் என்னும் மகவைப் பெறாது விடின், வையத்தார்க்கு எல்லாம் வசை - (அஃது) உலகத்தார்க் கெல்லாம் வசை.
அகலம்: தான் இறந்த பின்னர்த் தன் பெயரைத் தன் மகவு போல் நிறுத்துவ தாகலான், புகழை ‘எச்சம்’ என்றார். மகவைப் பெறாதாரை உலகு இகழாது. ஆனால், புகழைப் பெறாதாரை உலகம் இகழும். எச்சம்-மகவு. வசை- இகழ்.‘என்ப’ அசை. அளபெடை இசை நிறைக்க வந்தது. ‘பெறாது’ ஈறு கெட்டது.
கருத்து: புகழ் பெறாதானை உலகத்தார் இகழ்வர்.
வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம். (209)
பொருள்: இசை இ(ல்)லா(த) யாக்கை பொறுத்த நிலம் - புகழ் இல்லாத உடம்பைத் தாங்கிய நிலத்தின்கண், வசை இ(ல்)லா(த) வண் பயன் குன்றும் - வசையில்லாத வளப்பமான விளைவு குறையும்.
அகலம்: இல்லாத என்பது இரண்டிடத்தும் லகர வொற்றும் ஈறும் கெட்டு நின்றன. நச்சர் பாடம் ‘வண்பயம்’.
கருத்து: புகழ் செய்யாதான் நாட்டில் விளைவு குன்றும்.
வசையயாழிய வாழ்வாரே வாழ்வா ரிசையயாழிய
வாழ்வாரே வாழா தவர். (210)
பொருள்: வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் ‡ வசை நீங்க வாழ்பவரே (உயிருடன் கூடி) வாழ்பவர் ; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் ‡புகழ் நீங்க வாழ்பவரே (உயிருடன் கூடி) வாழாதவர்.
அகலம்: நச்சர் பாடம் ‘வாழ்வானே வாழ்வான்’, ‘வாழ்வானே வாழா தவன்’.
கருத்து: புகழ் இல்லாதார் உயிர் இல்லாதாரை ஒப்பர்.
இல்லறவியல் முற்றிற்று.
அஃதாவது, (ஒருவனை அறிவுடையார்) உயர்த்துக் கூறும் மொழி.
ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு. (201)
பொருள்: ஈதல் இசை பட வாழ்தல்-(ஒருவன்) ஈதலால் புகழ் உண்டாகும்படி வாழக் கடவன்; அஃது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை - புகழ் அல்லாமல் (மனித) உயிர்க்கு ஊதியம் (வேறு) இல்லை.
அகலம்: ஈதல் என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகை. அஃது என்பது செய்யுள் விகாரத்தால் ஆய்தம் கெட்டு நின்றது. ஊதியம் - இலாபம். தருமர் பாடம் ‘அவையல்ல’.
கருத்து: இல்லார்க்கு ஈந்து புகழ் பெறுதல் எய்தற்கரிய இம்மைப் பேறு.
உரைப்பா ருரைப்பவை யயல்லா மிரப்பார்க்கொன்
றீவார்மே னிற்கும் புகழ். (202)
பொருள்: உரைப்பார் உரைப்பவை எல்லாம் - சொல்வோர் சொல்வன வெல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழே- இரப்பவர்க்கு (அவர் விரும்பியது) ஒன்றைக் கொடுப்பவர் மேல் நிற்கும் புகழ்களே.
அகலம்: பிரிநிலை ஏகாரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. தன்னினம் கோடல் என்னும் உத்தியால், உரைப்பார் என்பது பாடுவோரையும் அடக்கி நின்றது.
கருத்து: ஈவோர் எல்லாராலும் புகழப்படுவர்.
ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில். (203)
பொருள்: உலகத்து ஒன்றா(க) உயர்ந்த புகழ் அல்லால் - உலகத்தின் கண் ஒப்பற்றதாக உயர்ந்த புகழ் அல்லாமல், பொன்றாது நிற்பது ஒன்று இல் - (என்றும்) அழியாது நிற்பது (வேறு) ஒன்று இல்லை.
அகலம்: ஒன்றாக என்பது செய்யுள் விகாரத்தால் ஈறு கெட்டு நின்றது. ஒருவன் பொன்றுங்கால், அவன் புகழ் பொன்றாது நிற்கும் என்றார். ‘மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே’ - புறநானூறு.
கருத்து: இவ் வுலகத்தின்கண் என்றும் பொன்றாது நிற்பது ஒப்பற்று உயர்ந்த புகழே.
நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு. (204)
பொருள்: நிலவரை நீள் புகழ் ஆற்றின் - நிலவுலகின் அளவு (வரையில்) நீண்டு நிற்கும் புகழை (ஒருவன்) செய்யின், புத்தேள் உலகு புலவரைப் போற்றாது‡ தெய்வ உலகத்தார் புலவரைப் போற்றார்.
அகலம்: நீள் என்பது வினைத் தொகை. உலகு என்பது ஆகு பெயர், உலகினர்க்கு ஆயினமையால். உலகு என்றமையால் அதற்கு ஏற்ப அதன் பயனிலையைப் போற்றாது என்று கூறினார். புகழ் செய்தோரைப் பாடிய புலவரைப் போற்றாமல் அவர் பாடிய பாட்டுடைத் தலைவரையே தேவர் போற்றுவர் என்றவாறு. இதனால், புலவர் தேவரால் போற்றப்படுதற் குரிய ரென்பது பெற்றாம்.
கருத்து: புகழ் செய்தாரைத் தேவரும் போற்றுவர்.
நத்தம்போர் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது. (205)
பொருள்: நத்தம் போர் கேடும் - ஆக்கத்தைப் போர்த்த கேடும் உள்ளது ஆகும் சாக்காடும் -(என்றும்) உள்ளது ஆகும் சாவும், வித்தகர்க்கு அல்லால் (ஏனையோர்க்கு) அரிது -அறிஞர்க்கு அல்லாமல் மற்றையோர்க்கு (ச் செய்தல்) இயலாது.
அகலம்: ஈகை தோற்ற மாத்திரையில் பொருட் கேட்டையும், உண்மையில் பொரு ளாக்கத்தையும் நல்குவதால், அதனை ‘நத்தம் போர் கேடு’ என்றார். பிறர் நன்மைக்காக உயிரை வழங்குதல் தோற்ற மாத்திரையில் சாவையும் உண்மையில் (புகழுடம்போடு கூடி) என்றும் உள்ளதாம் தன்மையையும் நல்குவதால் அதனை (‘உளதாகும் சாக்காடு’) என்றார். ‘உள்ளதாகும்’ என்பது ‘ள’கர வொற்றுக் கெட்டு நின்றது. ‘போர்’ என்பது வினைத்தொகை. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘நத்தம்போற்’. இக் குறளின் மூன்றாஞ் சீரின் முதற் சொல்லாகிய ‘உளது’ என்பது ‘ஆகும்’என்னும் ஆக்கச் சொல்லைக் கொண்டு நிற்றல் போல, இக் குறளின் முதற் சீரின் முதற் சொல்லாகிய ‘நத்தம்’ என்பதும் ‘ஆம்’ அல்லது ‘போர்’ என்பது போன்ற பொருள் தரும் ஒரு சொல்லோடு சேர்ந்து நிற்றல் பொருள் கோளுக்கு இன்றியமையாததா யிருக்க, அச் சொல்லை விடுத்துப் பொருள் கோளுக்கு வேண்டாத ‘போல்’ என்னும் உரையசைச் சொல்லைச் சேர்த்துப் புலவரெவரும் பாடாராகலின், ‘நத்தம்போற்’ என்பது ஏடு பெயர்த் தெழுதியோனால் நேர்ந்த பிழையயனக் கொள்க. ‘மாய்ந்தவர் மாய்ந்தவ ரல்லர்கண் மாயா, தேந்திய கைகொ டிரந்தவ ரெந்தாய், வீய்ந்தவ ரென்பர் வீய்ந்தவ ரேனும், ஈய்ந்தவ ரல்ல திருந்தவர் யாரே’ - கம்ப ராமாயணம்.
கருத்து: பிறருக்கு ஈவோரும் பிறருக்காக உயிர் வழங்குவோரும் பெரியர்.
தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றிலிற் றோன்றாமை நன்று. (206)
பொருள்: தோன்றின் புகழொடு தோன்றுக - (ஒருவன் பல்லார்முன்) தோன்றில் புகழுடன் தோன்றுக; அஃது இல்லார் தோன்றலின் தோன்றாமை நன்று- புகழ் இல்லாதார் (பல்லார் முன்) தோன்றுதலினும் தோன்றா திருத்தல் நன்மை.
அகலம்: ‘தோன்றல்’ என்பதற்கு ‘பிறத்தல்’ என்று பொருள் உரைப்பாரும் உளர். பிறத்தலும் பிறவாதிருத்தலும் ஒருவன் விருப்பப்படி நிகழ்வன அல்ல ; அவன் முன் வினைப்படியே நிகழ்வன. ஆகலான், அவ்வுரை பொருந்தாது.
கருத்து: புகழ் செய்யாதார் தம் வீட்டை விட்டு வெளியேறாமை நன்று.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
யிகழ்வாரை நோவ தெவன். (207)
பொருள்: புகழ் பட வாழாதார் - புகழ் உண்டாகும்படியாக வாழாதவர், தம் நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்‡ தம்மை நோவாதவராய்த் தம்மை இகழ்வாரை நோவது யாது காரணத்தால்?
கருத்து: புகழ் செய்யாதார் தம்மை இகழ்வாரை நோவலாகாது.
வசையயன்ப வையத்தார்க் கெல்லா மிசையயன்னு
மெச்சம் பெறாஅ விடின். (208)
பொருள்: இசை என்னும் எச்சம் பெறா(து) விடின் ‡புகழ் என்னும் மகவைப் பெறாது விடின், வையத்தார்க்கு எல்லாம் வசை - (அஃது) உலகத்தார்க் கெல்லாம் வசை.
அகலம்: தான் இறந்த பின்னர்த் தன் பெயரைத் தன் மகவு போல் நிறுத்துவ தாகலான், புகழை ‘எச்சம்’ என்றார். மகவைப் பெறாதாரை உலகு இகழாது. ஆனால், புகழைப் பெறாதாரை உலகம் இகழும். எச்சம்-மகவு. வசை- இகழ்.‘என்ப’ அசை. அளபெடை இசை நிறைக்க வந்தது. ‘பெறாது’ ஈறு கெட்டது.
கருத்து: புகழ் பெறாதானை உலகத்தார் இகழ்வர்.
வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம். (209)
பொருள்: இசை இ(ல்)லா(த) யாக்கை பொறுத்த நிலம் - புகழ் இல்லாத உடம்பைத் தாங்கிய நிலத்தின்கண், வசை இ(ல்)லா(த) வண் பயன் குன்றும் - வசையில்லாத வளப்பமான விளைவு குறையும்.
அகலம்: இல்லாத என்பது இரண்டிடத்தும் லகர வொற்றும் ஈறும் கெட்டு நின்றன. நச்சர் பாடம் ‘வண்பயம்’.
கருத்து: புகழ் செய்யாதான் நாட்டில் விளைவு குன்றும்.
வசையயாழிய வாழ்வாரே வாழ்வா ரிசையயாழிய
வாழ்வாரே வாழா தவர். (210)
பொருள்: வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் ‡ வசை நீங்க வாழ்பவரே (உயிருடன் கூடி) வாழ்பவர் ; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் ‡புகழ் நீங்க வாழ்பவரே (உயிருடன் கூடி) வாழாதவர்.
அகலம்: நச்சர் பாடம் ‘வாழ்வானே வாழ்வான்’, ‘வாழ்வானே வாழா தவன்’.
கருத்து: புகழ் இல்லாதார் உயிர் இல்லாதாரை ஒப்பர்.
இல்லறவியல் முற்றிற்று.
ஈகை
இருபதாம் அதிகாரம் - ஈகை
அஃதாவது, (இல்லார் வேண்டுவன) ஈதல்
வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
குறியயதிர்ப்பை நீர துடைத்து. (191)
பொருள்: வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - (பொருள்) இல்லாதார்க்கு (அவர் வேண்டுவது) ஒன்றை ஈதலே ஈகை; மற்று எல்லாம் குறியயதிர்ப்பை நீரது உடைத்து - ஏனையோர்க்கு ஈதலெல்லாம் குறியயதிர்ப்பையின் தன்மையை யுடைத்து.
அகலம்: குறியயதிர்ப்பை - ஒரு பொருளைக் கொள்ளக் குறித்து அதற்கு எதிராகக் கொடுப்பது. அஃதாவது, பண்டமாற்று. ‘நிரப்பிடும்பை மிக்கார்க் குதவவொன் றீதல், சுரத்திடைப் பெய்த பெயல்’ - பழமொழி நானூறு. ‘ஏற்றகை மாற்றாமை யயன்னானுந் தாம் வரையார், ஆற்றாதார்க் கீவதா மாண்கடன் - ஆற்றின், மலிகடற் றண்சேர்ப்ப மாறீவார்க் கீதல், பொலிகட னென்னும் பெயர்த்து’- நாலடியார். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது.
கருத்து: வறியார்க்கு ஈவதே ஈகை.
நல்லா றெனினுங் கொளறீது மேலுலக
மில்லெனினு மீதலே நன்று. (192)
பொருள்: நல் ஆறு என்னினும் கொள்ளல் தீது - (மேல் உலகத்திற்கு) நல்ல நெறி என்று (நூல்களெல்லாம்) கூறினும் (பிறர் பால் ஒன்றை) ஏற்றல் தீமை ; மேல் உலகம் இல் என்னினும் ஈதல் நன்று - மேல் உலகம் இல்லை என்று (நூல்களெல்லாம்) கூறினும் (பிறருக்கு) ஈதல் நன்மை.
அகலம்: ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. கொள்ளல் என்பதன் ளகர வொற்றும் , என்னினும் என்பதன் னகர வொற்றும் கெட்டு நின்றன. ‘வெள்ளியை யாதல் விளம்பினை மேலோர் வள்ளியராக வழங்குவ தல்லால், எள்ளுவ வென்சில வின்னுயி ரேனும், கொள்ளுத றீது கொடுப்பது நன்றால்’ என்றார் கம்பர். மேல் உலகம் ‡ வீட்டுலகம்.
கருத்து: ஏற்றல் இழிவு. ஈதல் உயர்வு.
இலனென்று மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள. (193)
பொருள்: இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் - (இவன்) இல்லாதவன் என்னும் இழிவை (ஒருவரிடத்தும்) சொல்லாமல் (அவனுக்கு) ஈதல், குலன் உடையான்கண் உள-நற்குலத்தின்கண் பிறந்தானிடத்து உள்ளன.
அகலம்: இல்லன் என்பது லகர வொற்றுக் கெட்டு நின்றது. உரையாமை என்பது எதிர்மறை வினையயச்சம். இலனென்னும் எவ்வம் உரையாமை என்பதற்கு இரப்போன் தான் இலன் என்று உரையா முன்னர் அவன் குறிப்பறிந்து எனவும், இரக்கப்பட்டோன் ‘யான் இலன்’ என்னும் இழி சொல்லை உரையாமல் எனவும், இரந்தோன் தன்னிடம் ஏற்ற பின்னர்ப் பிறர்பால் சென்று தான் இலன் என்னும் இழிவை மீண்டும் உரையாத வாறு அவன் வறுமை நீங்கும் படியாக எனவும் உரைத்தலும் அமையும். ஈதல் பல திறத்தனவாகலின், அது பன்மைப் பொருளிற் கூறப்பெற்றது. தருமர் பாடம் ‘இலமென்னும்’. ஏகாரம் அசை.
கருத்து: உயர் குடிக்கு அழகு உவப்புடன் ஈதல்.
இன்னா திரக்கப் படுத லிரந்தவ
ரின்முகங் காணு மளவு. (194)
பொருள்: இரந்தவர் இன் முகம் காணும் அளவு (ம்) -(தன்பால் பொருள் ஏற்று மகிழ்ச்சியுற்ற) இரந்தவரது இனிய முகத்தைக் காணும் வரையிலும், இரக்கப்படுதல் (உம்) இன்னாது - (இரத்தலே போல) இரக்கப்படுதலும் துன்பம் தருவது.
அகலம்: இரக்கப்படுதலும் என்பதன் எச்சவும்மையும், அளவும் என்பதன் முற்றும்மையும் செய்யுள் விகாரத்தால் தொக்கன.
கருத்து: ஈவான் தான் ஈயும் வரையில் துன்புறுவன்.
ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின். (195)
பொருள்: ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் - (தவம்) இயற்றுவாரது வலிமை (தம்) பசியைப் பொறுத்தல்; (அஃது) அப் பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - அஃது (பசித்தோர்க்கு உணவு கொடுத்து) அப்பசியை நீக்குவாருடைய வலிமைக்குப் பின் நிற்பது.
அகலம்: அஃது என்பது தோன்றா எழுவாயாக வருவிக்கப்பட்டது. பின் என்பது ஆகுபெயர், பின் நிற்பதற்கு ஆயினமையால்.
கருத்து: ஈகை தவத்திலும் மேற்பட்டது.
அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (196)
பொருள்: அற்றார் அழி பசி தீர்த்தல் - (இல்வாழ்வான்) பொருள் இல்லாதாரை வருத்தும் பசியைத் தீர்க்கக் கடவன் ; அஃது பொருள் பெற்றான் ஒருவன் வைப்பு உழி - அது பொருளைப் பெற்றவன் ஒருவன் (அதனை) வைத்தற் குரிய இடம்.
அகலம்: அழி என்பது வினைத்தொகை.
கருத்து: வறிஞரது பசியைத் தீர்த்தல் செல்வத்தைப் பத்திரப் படுத்தி வைக்கும் இரும்புப் பெட்டி.
பாத்தூண் மரீஇ யவனைப் பசியயன்னுந்
தீப்பிணி தீண்ட லரிது. (197)
பொருள்: பாத்து ஊண் மருவியவனை -(தன்னிடத்துள்ளதை இல்லார்க்குப் ) பகுந்து கொடுத்து உண்ணுதலைப் பொருந்தியவனை, பசி என்னும் தீ பிணி தீண்டல் அரிது - பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தொடுதல் இன்று.
அகலம்: மருவியவன் என்பது இன்னிசை நோக்கி மரீஇயவன் என நின்றது. நச்சர் பாடம் ‘பார்த்தூண்’.
கருத்து: வறிஞர் பசி தீர்ப்பான் வறுமையுறல் இல்லை.
ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். (198)
பொருள்: தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கண்ணவர் - தாம் செல்வத்தை (ப் பிறருக்கு வழங்காமல்) வைத்திருந்து இழக்கும் கடின உள்ள முடையார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார் கொல் -(இல்லார்க்கு) ஈந்து (அவர் பெற்று) மகிழ்தலால் (ஈந்தார் அடையும்) இன்பத்தை அறியார் போலும்?
அகலம்: பொருளை ஏற்றவர் உவத்தலைப் பார்த்துப் பொருளை ஈந்தார்க்கு உளதாம் இன்பத்தை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்றார். ‘கொல்’ என்பது ‘போலும்’ என்னும் குறிப்பு வினாப் பொருளில் வந்தது. மணக்குடவர் பாடம் ‘வன்கண் ணவர்’.
கருத்து: வறியார்க்கு ஈயாதார் வன்கண்ணர்.
இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல். (199)
பொருள்: நிரப்பிய தாமே தமியர் உண்ணல் -(இலையில்) நிரப்பியவற்றைத் தாமே தமியரா யிருந்து உண்ணுதல், இரத்தலின் இன்னாது - இரத்தலைப் போலத் துன்பத்தைத் தருவது.
அகலம்: உண்ணல் என்பது ணகர வொற்றுக் கெட்டு நின்றது. நிரப்பிய என்று கூறியதனான், நிரப்புதற்கு ஒன்றும் இல்லாத வறிஞன் தனியனாய்த் தெண்ணீ ருண்டல் இன்னாதது அன்று எனக் கொள்க. தருமர் பாடம் ‘தாமே தனிய ருணல்’. தாமத்தர், நச்சர் பாடம் ‘தானே தனிய னுணல்’. ‘மன்ற’ அசை.
கருத்து: பகுந்து உண்ணாமை படுந்துயர் விளைக்கும்.
சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை. (200)
பொருள்: சாதலின் இன்னாதது இல்லை -சாதலைப் போலத் துன்பத்தைத் தருவது (வேறொன்று) இல்லை ; ஈதல் இயையா (த) கடை அதுவும் இனிது -ஈதல் இயலாத பொழுது சாவும் (வள்ளலுக்கு) இன்பத்தைத் தருவதாம்.
அகலம்: வள்ளல் - வரையாது கொடுப்பவன். தருமர், மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘ஈத லிசையாக் கடை’.
கருத்து: ஈய முடியாத போது சாவும் இன்பமாம்.
அஃதாவது, (இல்லார் வேண்டுவன) ஈதல்
வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
குறியயதிர்ப்பை நீர துடைத்து. (191)
பொருள்: வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - (பொருள்) இல்லாதார்க்கு (அவர் வேண்டுவது) ஒன்றை ஈதலே ஈகை; மற்று எல்லாம் குறியயதிர்ப்பை நீரது உடைத்து - ஏனையோர்க்கு ஈதலெல்லாம் குறியயதிர்ப்பையின் தன்மையை யுடைத்து.
அகலம்: குறியயதிர்ப்பை - ஒரு பொருளைக் கொள்ளக் குறித்து அதற்கு எதிராகக் கொடுப்பது. அஃதாவது, பண்டமாற்று. ‘நிரப்பிடும்பை மிக்கார்க் குதவவொன் றீதல், சுரத்திடைப் பெய்த பெயல்’ - பழமொழி நானூறு. ‘ஏற்றகை மாற்றாமை யயன்னானுந் தாம் வரையார், ஆற்றாதார்க் கீவதா மாண்கடன் - ஆற்றின், மலிகடற் றண்சேர்ப்ப மாறீவார்க் கீதல், பொலிகட னென்னும் பெயர்த்து’- நாலடியார். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது.
கருத்து: வறியார்க்கு ஈவதே ஈகை.
நல்லா றெனினுங் கொளறீது மேலுலக
மில்லெனினு மீதலே நன்று. (192)
பொருள்: நல் ஆறு என்னினும் கொள்ளல் தீது - (மேல் உலகத்திற்கு) நல்ல நெறி என்று (நூல்களெல்லாம்) கூறினும் (பிறர் பால் ஒன்றை) ஏற்றல் தீமை ; மேல் உலகம் இல் என்னினும் ஈதல் நன்று - மேல் உலகம் இல்லை என்று (நூல்களெல்லாம்) கூறினும் (பிறருக்கு) ஈதல் நன்மை.
அகலம்: ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. கொள்ளல் என்பதன் ளகர வொற்றும் , என்னினும் என்பதன் னகர வொற்றும் கெட்டு நின்றன. ‘வெள்ளியை யாதல் விளம்பினை மேலோர் வள்ளியராக வழங்குவ தல்லால், எள்ளுவ வென்சில வின்னுயி ரேனும், கொள்ளுத றீது கொடுப்பது நன்றால்’ என்றார் கம்பர். மேல் உலகம் ‡ வீட்டுலகம்.
கருத்து: ஏற்றல் இழிவு. ஈதல் உயர்வு.
இலனென்று மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள. (193)
பொருள்: இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் - (இவன்) இல்லாதவன் என்னும் இழிவை (ஒருவரிடத்தும்) சொல்லாமல் (அவனுக்கு) ஈதல், குலன் உடையான்கண் உள-நற்குலத்தின்கண் பிறந்தானிடத்து உள்ளன.
அகலம்: இல்லன் என்பது லகர வொற்றுக் கெட்டு நின்றது. உரையாமை என்பது எதிர்மறை வினையயச்சம். இலனென்னும் எவ்வம் உரையாமை என்பதற்கு இரப்போன் தான் இலன் என்று உரையா முன்னர் அவன் குறிப்பறிந்து எனவும், இரக்கப்பட்டோன் ‘யான் இலன்’ என்னும் இழி சொல்லை உரையாமல் எனவும், இரந்தோன் தன்னிடம் ஏற்ற பின்னர்ப் பிறர்பால் சென்று தான் இலன் என்னும் இழிவை மீண்டும் உரையாத வாறு அவன் வறுமை நீங்கும் படியாக எனவும் உரைத்தலும் அமையும். ஈதல் பல திறத்தனவாகலின், அது பன்மைப் பொருளிற் கூறப்பெற்றது. தருமர் பாடம் ‘இலமென்னும்’. ஏகாரம் அசை.
கருத்து: உயர் குடிக்கு அழகு உவப்புடன் ஈதல்.
இன்னா திரக்கப் படுத லிரந்தவ
ரின்முகங் காணு மளவு. (194)
பொருள்: இரந்தவர் இன் முகம் காணும் அளவு (ம்) -(தன்பால் பொருள் ஏற்று மகிழ்ச்சியுற்ற) இரந்தவரது இனிய முகத்தைக் காணும் வரையிலும், இரக்கப்படுதல் (உம்) இன்னாது - (இரத்தலே போல) இரக்கப்படுதலும் துன்பம் தருவது.
அகலம்: இரக்கப்படுதலும் என்பதன் எச்சவும்மையும், அளவும் என்பதன் முற்றும்மையும் செய்யுள் விகாரத்தால் தொக்கன.
கருத்து: ஈவான் தான் ஈயும் வரையில் துன்புறுவன்.
ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின். (195)
பொருள்: ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் - (தவம்) இயற்றுவாரது வலிமை (தம்) பசியைப் பொறுத்தல்; (அஃது) அப் பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - அஃது (பசித்தோர்க்கு உணவு கொடுத்து) அப்பசியை நீக்குவாருடைய வலிமைக்குப் பின் நிற்பது.
அகலம்: அஃது என்பது தோன்றா எழுவாயாக வருவிக்கப்பட்டது. பின் என்பது ஆகுபெயர், பின் நிற்பதற்கு ஆயினமையால்.
கருத்து: ஈகை தவத்திலும் மேற்பட்டது.
அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (196)
பொருள்: அற்றார் அழி பசி தீர்த்தல் - (இல்வாழ்வான்) பொருள் இல்லாதாரை வருத்தும் பசியைத் தீர்க்கக் கடவன் ; அஃது பொருள் பெற்றான் ஒருவன் வைப்பு உழி - அது பொருளைப் பெற்றவன் ஒருவன் (அதனை) வைத்தற் குரிய இடம்.
அகலம்: அழி என்பது வினைத்தொகை.
கருத்து: வறிஞரது பசியைத் தீர்த்தல் செல்வத்தைப் பத்திரப் படுத்தி வைக்கும் இரும்புப் பெட்டி.
பாத்தூண் மரீஇ யவனைப் பசியயன்னுந்
தீப்பிணி தீண்ட லரிது. (197)
பொருள்: பாத்து ஊண் மருவியவனை -(தன்னிடத்துள்ளதை இல்லார்க்குப் ) பகுந்து கொடுத்து உண்ணுதலைப் பொருந்தியவனை, பசி என்னும் தீ பிணி தீண்டல் அரிது - பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தொடுதல் இன்று.
அகலம்: மருவியவன் என்பது இன்னிசை நோக்கி மரீஇயவன் என நின்றது. நச்சர் பாடம் ‘பார்த்தூண்’.
கருத்து: வறிஞர் பசி தீர்ப்பான் வறுமையுறல் இல்லை.
ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். (198)
பொருள்: தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கண்ணவர் - தாம் செல்வத்தை (ப் பிறருக்கு வழங்காமல்) வைத்திருந்து இழக்கும் கடின உள்ள முடையார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார் கொல் -(இல்லார்க்கு) ஈந்து (அவர் பெற்று) மகிழ்தலால் (ஈந்தார் அடையும்) இன்பத்தை அறியார் போலும்?
அகலம்: பொருளை ஏற்றவர் உவத்தலைப் பார்த்துப் பொருளை ஈந்தார்க்கு உளதாம் இன்பத்தை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்றார். ‘கொல்’ என்பது ‘போலும்’ என்னும் குறிப்பு வினாப் பொருளில் வந்தது. மணக்குடவர் பாடம் ‘வன்கண் ணவர்’.
கருத்து: வறியார்க்கு ஈயாதார் வன்கண்ணர்.
இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல். (199)
பொருள்: நிரப்பிய தாமே தமியர் உண்ணல் -(இலையில்) நிரப்பியவற்றைத் தாமே தமியரா யிருந்து உண்ணுதல், இரத்தலின் இன்னாது - இரத்தலைப் போலத் துன்பத்தைத் தருவது.
அகலம்: உண்ணல் என்பது ணகர வொற்றுக் கெட்டு நின்றது. நிரப்பிய என்று கூறியதனான், நிரப்புதற்கு ஒன்றும் இல்லாத வறிஞன் தனியனாய்த் தெண்ணீ ருண்டல் இன்னாதது அன்று எனக் கொள்க. தருமர் பாடம் ‘தாமே தனிய ருணல்’. தாமத்தர், நச்சர் பாடம் ‘தானே தனிய னுணல்’. ‘மன்ற’ அசை.
கருத்து: பகுந்து உண்ணாமை படுந்துயர் விளைக்கும்.
சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை. (200)
பொருள்: சாதலின் இன்னாதது இல்லை -சாதலைப் போலத் துன்பத்தைத் தருவது (வேறொன்று) இல்லை ; ஈதல் இயையா (த) கடை அதுவும் இனிது -ஈதல் இயலாத பொழுது சாவும் (வள்ளலுக்கு) இன்பத்தைத் தருவதாம்.
அகலம்: வள்ளல் - வரையாது கொடுப்பவன். தருமர், மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘ஈத லிசையாக் கடை’.
கருத்து: ஈய முடியாத போது சாவும் இன்பமாம்.
ஒப்புர வறிதல்
பத்தொன்பதாம் அதிகாரம் - ஒப்புர வறிதல்
அஃதாவது, நாடொப்பன செய்தல். ‘அறிதல்’ என்பது ஈண்டுச் செய்தற் பொருட்டு.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு. (181)
பொருள்: கடப்பாடு கைமாறு வேண்டா- ஒப்புரவுகள் கைம்மாற்றை விரும்பா; மாரிமாட்டு உலகு என் ஆற்றும் - மழைக்கு உலகம் யாது கைம்மாற்றினைச் செய்யும்? (ஒன்றும் செய்ய இயலாது).
அகலம்: கொல், ஓ என்பன அசைகள். கைம்மாறு - பிரதியுபகாரம். கடப்பாடு என்றமையாலும், மழையை உவமானமாகக் கூறினமை யாலும், ஒப்புர வென்பது கைம்மாறு கருதாத உதவி என்று கொள்க. ஒப்புரவு தவிர்க்கப்படுவ தன்று என்பதை உணர்த்த வேண்டி, அதனைக் கடப்பாடு என்றார். ஒப்புரவு செய்வாரது வேண்டாமையை ஒப்புரவின் மேல் ஏற்றிக் கூறினார்.
கருத்து: ஒப்புரவு கைம்மாறு கருதாத உதவி.
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (182)
பொருள்: தான் ஆற்றி தந்த பொருள் எல்லாம் - முயற்சி செய்து தந்த பொருளெல்லாம், தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு - தகுதி யுடையார்க்கு உதவி செய்தற் பொருட்டு.
அகலம்: ‘ஆற்றித் தந்த’ என்பதற்குத் ‘தாள்’ என்பதை கர்த்தாவாகக் கொள்க.
கருத்து: சம்பாதிக்கும் பொருளெல்லாம் தக்கார்க்கு உதவி செய்தற் பொருட்டே.
புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
யயாப்புரவி னல்ல பிற. (183)
பொருள்: ஒப்புரவின் பிற நல்ல - ஒப்புரவு போன்ற மற்றை நல்ல செயல் களை, புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிது - தெய்வ உலகத்தும் இவ் வுலகத்தும் பெறுதல் அரிது.
அகலம்: ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. மணக்குடவர் பாடம் ‘பெறற்கரிதே’.
கருத்து: ஒப்புரவு போன்ற நல்லவை இவ் வுலகத்திலும் தெய்வ உலகத்திலும் இல்லை.
ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். (184)
பொருள்: ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் - (நாட்டுக்கு) ஒத்த செயலைச் செய்பவன் உயிரோடு கூடி வாழ்பவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்- அச் செயலைச் செய்யாதான் இறந்தவருள் (ஒருவனாகக்) கருதப்படுவான்.
அகலம்: நாட்டுக்கு ஒத்த செயல் - ஒப்புரவு
கருத்து: ஒப்புரவு செய்கின்றவன் உயிரோடு கூடி வாழ்கின்றவன்; ஒப்புரவு செய்யாதான் பிணத்தை ஒப்பன்.
ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு. (185)
பொருள்: உலகு அவாவும் பேர் அறிவாளன் திரு (அடைதல்) - உலக நடையை விரும்பிச் செய்யும் பெரிய அறிவினை ஆள்கின்றவன் செல்வத்தை அடைதல், ஊருணி நீர் நிறைந்து அற்று - ஊருணி நீர் நிறைந்தாற் போலும்.
அகலம்: ஊருணி - ஊரில் வாழ்வார் உண்ணும் நீரையுடைய குளம். உலகு என்பது ஆகுபெயர், உலக நடைக்கு ஆயினமையால். உலக நடையாவது, ஒப்புரவு. ‘நிறைந்தற்று’ என்பது வினையயச்சத் தொகை. ஊருணி நீரை ஊரார் தடையின்றித் துய்த்தல் போல, ஒப்புர வுடையான் செல்வத்தை ஊரார் தடையின்றித் துய்ப்பர் என்று கூறிய வாறு. ‘அடைதல்’ அவாய் நிலையான் வந்தது. ஏகாரம் அசை. அவாவும் என்பது ஈற்றயல் கெட்டு நின்றது. ‘ஊருணி நிறையவு முதவு மாடுயர், பார்கெழு பழுமரம் பழுத்தற் றாகவும், கார்மழை பொழியவுங் கழனி பாய்நதி, வார்புனல் பெருகவும் மறுக்கின் றார்கள்யார்’ என்றார் கம்பர்.
கருத்து: ஒப்புர வுடையான் செல்வம் ஊரார்க்குப் பயன் படும்.
பயன்மர முள்ளுர்ப் பழுத்தற்றாற் செல்வ
நயனுடை யான்கட் படின். (186)
பொருள்: நயன் உடையான்கண் செல்வம் படின் - ஒப்புரவு உடையானிடத்தில் செல்வம் பொருந்தின், (அது) பயன் மரம் ஊர் உள் பழுத்து அற்று - அது பயன் மரம் ஊரினுள் பழுத்தாற் போலும்.
அகலம்: ஊருள் பழுத்த மரம் ஊரார்க்கெல்லாம் பயன் படுதல் போல ஒப்புர வுடையான் செல்வம் ஊரார்க்கெல்லாம் பயன் படும் என்றவாறு. ஆல் என்பது அசை. தருமர்,
மணக்குடவர் பாடம் ‘பயமரம்’.
கருத்து: ஒப்புர வுடையான் செல்வம் ஊரார்க் கெல்லாம் உதவும்.
மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின். (187)
பொருள்: பெருந் தகையான்கண் செல்வம் படின் - (ஒப்புரவு செய்யும்) பெருந்தகைமையை யுடையானிடத்துச் செல்வம் பொருந்தின், (அது) மருந்து ஆகி தப்பா மரம் (இருத்தல்) அற்று - அது மருந்தாகித் தவறாத மரம் (இருத்தலைப்) போலும்.
அகலம்: தப்பா(த) மரம் - கொள்ளுதற்குத் தப்பாத மரம். மருந்தாகப் பயன் படும் மரம் யாரும் கொள்ளத்தக்க வாறு இருப்பின் அது மக்கட்கு எவ்வளவு பயன்படுமோ, அவ்வளவு பயன்படும், மக்கட்கு ஒப்புரவு செய்யும் பெருந்தகை யாளனிடம் இருக்கும் செல்வம் என்றவாறு. தாமத்தர் பாடம் ‘மருந்தாகித் தீர்க்கு மரத்தற்றால்’ ‘அத்து’ சாரியை. ‘ஆல்’ அசை.
கருத்து: ஒப்புர வுடையான் செல்வம் வறிஞர்க் கெல்லாம் மருந்து போல் உதவும்.
இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர். (188)
பொருள்: கடன் அறி காட்சி அவர் - (ஒப்புரவு செய்தல் தமது) கடன் என்று அறிந்த அறிவினை யுடையவர், ஒப்புரவிற்கு இடன் இல் பருவத்தும் ஒல்கார் - ஒப்புரவு செய்தற்கு இடம் இல்லாத காலத்தும் தளரார்.
அகலம்: ‘அடர்ந்து வறியரா யாற்றாத போழ்தும், இடங்கண் டறிவாமென் றெண்ணி யிராஅர், மடங்கொண்ட சாயன் மயிலன்னாய் சான்றோர், கடங்கொண்டுஞ் செய்வார் கடன்’ என்றார் பழமொழியார்.
கருத்து: ஒப்புரவு அறிந்தார் வறுமையுற்ற காலத்தும் ஒப்புரவு செய்வர்.
நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயுநீர
செய்ய வமைகலா வாறு. (189)
பொருள்: நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவு உடையான் வறிஞன் ஆதல், செய்யும் நீர செய்ய அமைகலா(த) ஆறே செய்யும் நீர்மையனவாகிய ஒப்புரவுகளைச் செய்ய முடியாத இடத்தே.
அகலம்: செய்யும் என்பதன் யகர வொற்றும், அமைகலாத என்பதன் ஈறும், ஏகாரமும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. முந்திய உரை யாசிரியர்கள் பாடம் ‘செய்யா தமைகலா வாறு’. ‘செய்ய அமைகலா வாறு’ என்பதே கருதிய பொருளைத் தருதலானும், ‘செய்யா தமைகலா வாறு’ என்பது பொருத்தமான பொருளைத் தாராமை யானும் ‘செய்ய அமைகலா’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.
கருத்து: ஒப்புரவு செய்வான் தான் வறிஞன் என்று உணர்வது, தான் செய்ய வேண்டிய ஒப்புரவுகளைச் செய்ய முடியாதவிடத்தே.
ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து. (190)
பொருள்: ஒப்புரவினால் கேடு வரும் என்னின் -ஒப்புரவு செய்தலினால் (தனக்குக்) கேடு வரும் என்றால், அஃது ஒருவன் விற்று கோள் தக்கது உடைத்து - ஒப்புரவை ஒருவன் விற்றுக் (கேட்டைக்) கொள்ளுதல் தகுதி உடைத்து.
அகலம்: ஒப்புரவைக் கொடுத்துக் கேட்டைக் கொள்ளுதல் தகுதி யுடைத்து என்றவாறு. விற்றல் - கொடுத்தல். கொள்ளுதல் -வாங்குதல். ‘கோள்’ முதனிலை திரிந்த தொழிற்பெயர். என்னின் என்பது னகர வொற்றுக் கெட்டு நின்றது. ஒருவன் தன்னை விற்றாயினும் ஒப்புரவு செய்தல் வேண்டும் என்று உரைப்பாரும் உளர். ‘உளவரை தூக்காத ஒப்புர வாண்மை, வளவரை வல்லைக்கெடும்’ என்று ஆசிரியர் பின்னர்க் கூறுகின்றமையால், அவ்வுரை பொருந்தாது.
கருத்து: கேடு வரு மெனினும் ஒப்புரவு செய்க.
அஃதாவது, நாடொப்பன செய்தல். ‘அறிதல்’ என்பது ஈண்டுச் செய்தற் பொருட்டு.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு. (181)
பொருள்: கடப்பாடு கைமாறு வேண்டா- ஒப்புரவுகள் கைம்மாற்றை விரும்பா; மாரிமாட்டு உலகு என் ஆற்றும் - மழைக்கு உலகம் யாது கைம்மாற்றினைச் செய்யும்? (ஒன்றும் செய்ய இயலாது).
அகலம்: கொல், ஓ என்பன அசைகள். கைம்மாறு - பிரதியுபகாரம். கடப்பாடு என்றமையாலும், மழையை உவமானமாகக் கூறினமை யாலும், ஒப்புர வென்பது கைம்மாறு கருதாத உதவி என்று கொள்க. ஒப்புரவு தவிர்க்கப்படுவ தன்று என்பதை உணர்த்த வேண்டி, அதனைக் கடப்பாடு என்றார். ஒப்புரவு செய்வாரது வேண்டாமையை ஒப்புரவின் மேல் ஏற்றிக் கூறினார்.
கருத்து: ஒப்புரவு கைம்மாறு கருதாத உதவி.
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (182)
பொருள்: தான் ஆற்றி தந்த பொருள் எல்லாம் - முயற்சி செய்து தந்த பொருளெல்லாம், தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு - தகுதி யுடையார்க்கு உதவி செய்தற் பொருட்டு.
அகலம்: ‘ஆற்றித் தந்த’ என்பதற்குத் ‘தாள்’ என்பதை கர்த்தாவாகக் கொள்க.
கருத்து: சம்பாதிக்கும் பொருளெல்லாம் தக்கார்க்கு உதவி செய்தற் பொருட்டே.
புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
யயாப்புரவி னல்ல பிற. (183)
பொருள்: ஒப்புரவின் பிற நல்ல - ஒப்புரவு போன்ற மற்றை நல்ல செயல் களை, புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிது - தெய்வ உலகத்தும் இவ் வுலகத்தும் பெறுதல் அரிது.
அகலம்: ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. மணக்குடவர் பாடம் ‘பெறற்கரிதே’.
கருத்து: ஒப்புரவு போன்ற நல்லவை இவ் வுலகத்திலும் தெய்வ உலகத்திலும் இல்லை.
ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். (184)
பொருள்: ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் - (நாட்டுக்கு) ஒத்த செயலைச் செய்பவன் உயிரோடு கூடி வாழ்பவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்- அச் செயலைச் செய்யாதான் இறந்தவருள் (ஒருவனாகக்) கருதப்படுவான்.
அகலம்: நாட்டுக்கு ஒத்த செயல் - ஒப்புரவு
கருத்து: ஒப்புரவு செய்கின்றவன் உயிரோடு கூடி வாழ்கின்றவன்; ஒப்புரவு செய்யாதான் பிணத்தை ஒப்பன்.
ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு. (185)
பொருள்: உலகு அவாவும் பேர் அறிவாளன் திரு (அடைதல்) - உலக நடையை விரும்பிச் செய்யும் பெரிய அறிவினை ஆள்கின்றவன் செல்வத்தை அடைதல், ஊருணி நீர் நிறைந்து அற்று - ஊருணி நீர் நிறைந்தாற் போலும்.
அகலம்: ஊருணி - ஊரில் வாழ்வார் உண்ணும் நீரையுடைய குளம். உலகு என்பது ஆகுபெயர், உலக நடைக்கு ஆயினமையால். உலக நடையாவது, ஒப்புரவு. ‘நிறைந்தற்று’ என்பது வினையயச்சத் தொகை. ஊருணி நீரை ஊரார் தடையின்றித் துய்த்தல் போல, ஒப்புர வுடையான் செல்வத்தை ஊரார் தடையின்றித் துய்ப்பர் என்று கூறிய வாறு. ‘அடைதல்’ அவாய் நிலையான் வந்தது. ஏகாரம் அசை. அவாவும் என்பது ஈற்றயல் கெட்டு நின்றது. ‘ஊருணி நிறையவு முதவு மாடுயர், பார்கெழு பழுமரம் பழுத்தற் றாகவும், கார்மழை பொழியவுங் கழனி பாய்நதி, வார்புனல் பெருகவும் மறுக்கின் றார்கள்யார்’ என்றார் கம்பர்.
கருத்து: ஒப்புர வுடையான் செல்வம் ஊரார்க்குப் பயன் படும்.
பயன்மர முள்ளுர்ப் பழுத்தற்றாற் செல்வ
நயனுடை யான்கட் படின். (186)
பொருள்: நயன் உடையான்கண் செல்வம் படின் - ஒப்புரவு உடையானிடத்தில் செல்வம் பொருந்தின், (அது) பயன் மரம் ஊர் உள் பழுத்து அற்று - அது பயன் மரம் ஊரினுள் பழுத்தாற் போலும்.
அகலம்: ஊருள் பழுத்த மரம் ஊரார்க்கெல்லாம் பயன் படுதல் போல ஒப்புர வுடையான் செல்வம் ஊரார்க்கெல்லாம் பயன் படும் என்றவாறு. ஆல் என்பது அசை. தருமர்,
மணக்குடவர் பாடம் ‘பயமரம்’.
கருத்து: ஒப்புர வுடையான் செல்வம் ஊரார்க் கெல்லாம் உதவும்.
மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின். (187)
பொருள்: பெருந் தகையான்கண் செல்வம் படின் - (ஒப்புரவு செய்யும்) பெருந்தகைமையை யுடையானிடத்துச் செல்வம் பொருந்தின், (அது) மருந்து ஆகி தப்பா மரம் (இருத்தல்) அற்று - அது மருந்தாகித் தவறாத மரம் (இருத்தலைப்) போலும்.
அகலம்: தப்பா(த) மரம் - கொள்ளுதற்குத் தப்பாத மரம். மருந்தாகப் பயன் படும் மரம் யாரும் கொள்ளத்தக்க வாறு இருப்பின் அது மக்கட்கு எவ்வளவு பயன்படுமோ, அவ்வளவு பயன்படும், மக்கட்கு ஒப்புரவு செய்யும் பெருந்தகை யாளனிடம் இருக்கும் செல்வம் என்றவாறு. தாமத்தர் பாடம் ‘மருந்தாகித் தீர்க்கு மரத்தற்றால்’ ‘அத்து’ சாரியை. ‘ஆல்’ அசை.
கருத்து: ஒப்புர வுடையான் செல்வம் வறிஞர்க் கெல்லாம் மருந்து போல் உதவும்.
இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர். (188)
பொருள்: கடன் அறி காட்சி அவர் - (ஒப்புரவு செய்தல் தமது) கடன் என்று அறிந்த அறிவினை யுடையவர், ஒப்புரவிற்கு இடன் இல் பருவத்தும் ஒல்கார் - ஒப்புரவு செய்தற்கு இடம் இல்லாத காலத்தும் தளரார்.
அகலம்: ‘அடர்ந்து வறியரா யாற்றாத போழ்தும், இடங்கண் டறிவாமென் றெண்ணி யிராஅர், மடங்கொண்ட சாயன் மயிலன்னாய் சான்றோர், கடங்கொண்டுஞ் செய்வார் கடன்’ என்றார் பழமொழியார்.
கருத்து: ஒப்புரவு அறிந்தார் வறுமையுற்ற காலத்தும் ஒப்புரவு செய்வர்.
நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயுநீர
செய்ய வமைகலா வாறு. (189)
பொருள்: நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவு உடையான் வறிஞன் ஆதல், செய்யும் நீர செய்ய அமைகலா(த) ஆறே செய்யும் நீர்மையனவாகிய ஒப்புரவுகளைச் செய்ய முடியாத இடத்தே.
அகலம்: செய்யும் என்பதன் யகர வொற்றும், அமைகலாத என்பதன் ஈறும், ஏகாரமும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. முந்திய உரை யாசிரியர்கள் பாடம் ‘செய்யா தமைகலா வாறு’. ‘செய்ய அமைகலா வாறு’ என்பதே கருதிய பொருளைத் தருதலானும், ‘செய்யா தமைகலா வாறு’ என்பது பொருத்தமான பொருளைத் தாராமை யானும் ‘செய்ய அமைகலா’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.
கருத்து: ஒப்புரவு செய்வான் தான் வறிஞன் என்று உணர்வது, தான் செய்ய வேண்டிய ஒப்புரவுகளைச் செய்ய முடியாதவிடத்தே.
ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து. (190)
பொருள்: ஒப்புரவினால் கேடு வரும் என்னின் -ஒப்புரவு செய்தலினால் (தனக்குக்) கேடு வரும் என்றால், அஃது ஒருவன் விற்று கோள் தக்கது உடைத்து - ஒப்புரவை ஒருவன் விற்றுக் (கேட்டைக்) கொள்ளுதல் தகுதி உடைத்து.
அகலம்: ஒப்புரவைக் கொடுத்துக் கேட்டைக் கொள்ளுதல் தகுதி யுடைத்து என்றவாறு. விற்றல் - கொடுத்தல். கொள்ளுதல் -வாங்குதல். ‘கோள்’ முதனிலை திரிந்த தொழிற்பெயர். என்னின் என்பது னகர வொற்றுக் கெட்டு நின்றது. ஒருவன் தன்னை விற்றாயினும் ஒப்புரவு செய்தல் வேண்டும் என்று உரைப்பாரும் உளர். ‘உளவரை தூக்காத ஒப்புர வாண்மை, வளவரை வல்லைக்கெடும்’ என்று ஆசிரியர் பின்னர்க் கூறுகின்றமையால், அவ்வுரை பொருந்தாது.
கருத்து: கேடு வரு மெனினும் ஒப்புரவு செய்க.
Subscribe to:
Posts (Atom)