Monday

வ.உ.சிதம்பரனாரின் அரசியல் பெருஞ்சொல் - 3

 சுய அரசாட்சிக்கு வழி

ஒரு பேரரசின் துணையைப் பெற்றுப் போர்புரிதல், அல்லது தேசம் முழுவதும் ஒரே காலத்தில் புரட்சி செய்தல், சுய அரசாட்சி வழி என்று சிலர் கூறுகின்றனர். நமக்கு ஆகா என்று நாம் தள்ளிய மேற்கூறிய முதல் மூன்று வகைச் சுய அரசாட்சிகளுக்கும் அவ்விரண்டில் ஒன்றுதான்வழி. 

ஆனால், நாம் அடைய விரும்பும் மேற்கூறிய நான்காவது வகைச் சுய அரசாட்சிக்கு அவ்வழிகளிற் செல்லுதல் அவசியம் இன்று. அன்றியும், அவ்வழிகள் தேச மக்கட்கும் பொருட்கும் அழிவம் கேடும் விளைவிப்பவை ; நமது காங்கிரஸ் கோட்பாட்டுக்கு மாறுபட்டவை ; நாம் கைக்கொள்ள முடியாதவை. ஆதலால் அவ்வழிகள் நாம் விரும்பும் சுய அரசாட்சியை அடைவதற்கும், நமது தேசத்தின் நிலைமைக்கும் பொருத்தமற்றவை யயன நாம் தள்ளிவிடுவோமாக.

நாம் விரும்பும் மேற்கூறிய நான்காவது வகைச் சுய அரசாட்சியை நாம் அடைவதற்கு வழிதான் யாது என்றால், நமது கிழவர்கள் ‘ஒத்துழைத்தல்’(Cooperation) என்கின்றனர். 

நமது தற்காலத் தலைவர்கள் ‘ஒத்துழையாமை’ (Non Cooperation)  என்கின்றனர்.

 நாம் ‘ஒத்துழைத்தலும் ஒத்துழையாமை யும்’ (Responsive Cooperation) என்கிறோம். 

இவை சொல் மாத்திரையில் மூன்றாகத் தோன்றுகின்றனவேயல்லாமல், உண்மையில் ஒன்றேயாம். 

இம் மூன்றும் இரப்புத்தான். ஆனால் சொல்லாலும் செயலாலும் வேறாகத் தோன்றுகின்ற இரப்பு. ஒத்துழைத்தல் என்பது நாம் அடைய விரும்பும் நமது உரிமைகளில் எதையேனும் நம் இராஜங்கத்தார் நமக்குத் தந்தாலும், தர மறுத்தாலும் நாம் அவர்க்கு வந்தனம் (Thanks) கூறி நமது தேச நிர்வாக வி­யத்தில் அவரோடு உடம்பட்டு உழைத்தல். 

‘ஒத்துழையாமை’ என்பது நாம் அடைய விரும்பும் நமது உரிமைகள் அனைத்தையும் ஒருங்கு நம் இராஜாங்கத்தார் நமக்குத் தரும் வரையில் நாம் அவரோடு, நமது தேச நிர்வாக வி­யத்தில் உடம்படாது மாறுபட்டு இருத்தல். ‘ஒத்துழைத்தலும் ஒத்துழை யாமையும்’ என்பது, நாம் அடைய விரும்பும் நமது உரிமைகளில் எதை யேனும் நம் இராஜாங்கத்தார் நமக்குத் தருவதாயிருந்தால், அதற்காக நாம் அவர்க்கு வந்தனம் (Thanks) கூறி அவரோட உடம்பட்டு உழைத்தலும், எதை யேனும் அவர் நமக்குத் தர மறுப்பாராயின் அது வி­யத்தில் நாம் அவரோடு உடம்படாது மாறுபட்டிருத்தலுமாம்.

‘ஒத்துழைத்தல்’ ‘இரப்பான் வெகுளாமை வேண்டும்’ என்னும் உண்மை யையும் ‘ஒத்துழையாமை’ ‘வேண்டாமை வேண்டவரும்’ என்னும் உண்மை யையும் ‘ஒத்துழைத்தலும் ஒத்துழையாமையும்’ ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க’ என்னும் உண்மையையும் உட்கொண்டுள்ளன.

எந்த இரப்பு எந்த உண்மையை கொண்டிருப்பினும், எல்லா இரப்பும் இரப்புத்தான். 

‘ஒத்துழைத்தல்’ தமக்கு உரியவற்றைப் பிறர் தரினும் தராவிடினும், அது நமது விதியயன்று கருதிப் பிறர்க்குப் பண்பு செய்யும் கிழவர் செயல் போன்றது. ‘ஒத்துழையாமை தின்பண்டம் முழுவதும் தமக்குத் தரும் வகையில் அதன் ஒரு பகுதியை ஏற்காது தாய் தந்தையரோடு கோபித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் செயல் போன்றது.

 ‘ஒத்துழைத்தலும் ஒத்துழையாமையும்’ தமக்குரியவற்றைத் தந்த போது உவந்தும் தராத போது வெகுண்டும் நிற்கும் காளையர் செயல்போன்றது.

இரத்தலால் சுய அரசாட்சி நமக்குக் கிடைக்குமா? எனின், நம் உரிமையை நம் இராஜாங்கத்தார் நமக்கு அளிக்கும்படி செய்யத்தக்க பெருமையோடு நாம் இரப்பின், சுய அரசாட்சி நமக்கு நிச்சயமாகக் கிடைக்கும். அப்பெருமை யாதெனின், நம் தேசத்துப் பல மத ஜாதித் தலைவர்களெல்லாம் ஒற்றுமைப் பட்டு இரத்தல். அது பற்றியே, நம் பாரதியார் ‘இரண்டு பட்டால் உண்டு வீழ்வு ; ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்று கூறியுள்ளார்.

சுய அரசாட்சி அடைவதற்கு நாம் ஒற்றுமைப்படுதல் இன்றியமையாத தொன்றாயிருக்குங்கால், நம் தலைவர்களில் சிலர் நம் சுதேச மன்னர்களின் ஆள்கைக்குட்பட்ட தேசங்களிலும் நம் சுய அரசாட்சி பரவ வேண்டுமென்றும், அதற்காக அத்தேசங்களின் குடிகளையும் நாம் காங்கிரஸ் மகாசபையில் சேர்த்துக் கொண்டு கிளர்ச்சி செய்ய வேண்டுமென்றும், பேசக் கேட்டிருக்கிறேன். 

இப்பேச்சு எனக்கு ஓர் புதுமையாக தோன்றிற்று. நாம் வேண்டுவது பெரிய பிரிட்டன் தேசத்து அரசரைச் சார்ந்திருக்கும் கோனாட்சி.  நம் சுதேச மன்னர்களின் அரசாட்சியும் பெரிய பிரிட்டன் தேசத்து அரசைச் சார்ந்துள்ள கோனாட்சிதானே? நம் பக்கத்திலுள்ள நாம் சுதேசக் கோனாட்சியை ஒழித்துவிட்டுப் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள பிற தேசக் கோனாட்சியை ஏற்படுத்த வேண்டுமென்பது வியப்பன்றோ? அதற்காகச் சுதேச மன்னர்களின் குடிகளைச் சேர்த்துக்கொண்டு  நாம் கிளர்ச்சி செய்தல். அச்சுதேச மன்னர்கள் நம்மிடம் கொண்டுள்ள அநுதாபத்தைக் கெடுக்கும் அன்றோ? அச்சுதேச மன்னர்களின் அரசாட்சி, அவர்கள் தேசத்துக் குடிகளுக்குச் சுய அரசாட்சியன்றோ?

அக்குடிகளால் தேர்ந்தெடுக்கப் பெற்ற பிரதிநிதிகளின் ஆலோசனை முடிவுப்படி அம்மன்னர்கள் அரசாட்சி செய்ய வேண்டுமென்பது, அக்குடிகள் அம்மன்னர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டிய உரிமை. அவ்வி­யத்தில் நாம் பிரவேசித்தல் தகுதியன்று. அதில் நாம் பிரவேசித்தல் நம் பக்கத்திலும் பகைமையை உண்டாக்குதலேயன்றி வேறன்று. அதனால் நம் காங்கிரஸ் மகாசபை, சுதேச மன்னர்களின் அரசாட்சி சம்பந்தமான காரியங்களில் தலையிடலாகாதென்று யான் வற்புறுத்துகின்றேன்.

சில வரு­ங்களுக்கு முன் வரையில் நம் காங்கிரஸ் நமது இராஜீய நோக்கங்களை இங்கிலாந்து முதலிய தேசங்களில் பரப்புவதற்காக இங்கிலாந்தில் சில நண்பர்களை ஏற்படுத்தி அவர்கள் மூலமாக ‘இந்தியா’ என்னும் ஒரு பத்திரிகையை நடத்தி வந்தது. நமது நோக்கங்களைப் பற்றிய பிரச்சாரங்கள் செய்வதற்கு நாம் இங்கிலாந்திலும் மற்றைய தேசங்களிலும் நமது ஸ்தாபனங்களை ஏற்படுத்த வேண்டியதிருக்க, இங்கிலாந்திலிருந்த ஸ்தாபனத்தையும்கூடப் பொருட்செலவினதென்றும் பயனற்றதென்றும் நாம் எடுத்துவிட்டது ஒரு பெரும்பிழையாகும். 

தேசாபிமானமும் சகல திறமைகளும் சேர்ந்து முதிர்ந்த நம் தேச பக்தர்களிற் சிலர் இங்கிலாந்து முதலிய தேசங்களில் நிலையாகத் தங்கி நமது நோக்கங்களைப் பிரச்சாரம் செய்வதற்குரிய ஸ்தாபனங்களை ஏற்படுத்தி வேலைகள் செய்துவரும்படியாக நமது காங்கிரஸ் ஏற்பாடு செய்தல் வேண்டும். செலவுக்குறைவு முதலியவற்றைக் கவனித்துத் தகுதியில்லாதாரை அந்த அயல்நாட்டு ஸ்தாபனங்களின் தலைவர்களாக நாம் அனுப்புவோமாயின், ‘அது கடைமுறை தான் சாம் துயரம் தரும்’. ஆதலால், அதற்குச் சகல வகைகளிலும் தகுதி வாய்ந்த இந்திய தேசாபிமானிகளைத் தெரிந்தெடுத்து அனுப்புதல் நமது கடமையாகும்.

ஒற்றுமைக்குரிய வழிகள்

நம் தேசத்தார்களில் ஒவ்வொருவரும் தம்தம் மதக் கோட்பாடுகளும் ஜாதிக் கோட்பாடுகளும் பிறர் மதக் கோட்பாடுகளையும் ஜாதிக் கோட்பாடுகளையும், பாதிக்காதவாறு திருத்திக் கொள்ளுதல் வேண்டும்.  ஹிந்து மதமும் முகம்மதிய மதமும் முரண்படுகிற கோட்பாடுகளில் முக்கியமானவை இரண்டு. அவையாவன : 

(1) முகம்மதியர் பக்ரீத் முதலிய பண்டிகைகளில் ஹிந்துக்கள் பார்த்து மனம் வருந்தும்படியாகப் பசுக்களைக் கொல்லுதல்

 (2) பள்ளி வாசல்களில் தொழுது கொண்டிருக்கிற முகம்மதியருடைய மனம் கலையும்படியான விதத்தில் ஹிந்துக்களுடைய ஊர்கோலங்களை மேள வாத்தியங்களுடன் பள்ளிவாசல்களின் பக்கத்து வீதிவழியாகக் கொண்டு போதல், பூரண தேசாபிமானமுடைய இரு மதத் தலைவர்களும் ஒன்றுகூடி ‘கொடுத்து வாங்கல்’ (Give and take) என்னும் கொள்கையை உபயோகப் படுத்தி இம்முரண்பாட்டுக் கோட்பாடுகளைத் திருத்திக் கொள்ளுதல் நமது ஒற்றுமைக்கு முதல் வழியாகும். 

ஹிந்துக்களுள் ‘உயர்ந்த ஜாதியார்’ என்னப்படுவோரும் ‘தாழ்ந்த ஜாதியார்’ என்னப்படுவோரும் முரண்படுகிற கோட்பாடுகளில் முக்கிய மானவை இரண்டு. அவையாவன :

1. ‘உயர்ந்த ஜாதியார்’ என்னப்படுவோர் தம்மைப் பன்றி முதலிய அசுத்தப் பிராணிகள் நெருங்கும் அளவுகூடத் ‘தாழ்ந்த ஜாதியார்’ என்னப்படுவோர் நெருங்கவிடாமை.

2. தாழ்ந்த ஜாதியார் என்னப்படுவோர் உயர்ந்த ஜாதியார் என்னப் படுவோருடன் சமபந்தி போஜனம் செய்ய விரும்புதல்.

3. பூரண மனித அறிவையுடைய இவ்விருவகை ஜாதித் தலைவர்கள் சிலர் ஒன்று கூடிக் ‘கொடுத்து வாங்கல்’ என்னும் கொள்கையை உபயோகப்படுத்தி இம்முரண்பாட்டுக் கோட்பாடுகளைத் திருத்திக் கொள்ளுதல் நமது ஒற்றுமைக்கு இரண்டாவது வழியாகும். ‘உயர்ந்த ஜாதியார்’ என்னப்படுவோர் ‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’, ‘நல்ல குலமென்றும் தீய குலமென்றும் சொல்லலளவல்லாற் பொருளில்லை’ என்னும் முன்னோர் மொழிகளையும், ‘தாழ்ந்த ஜாதியார்’ என்னப்படுவோர் ‘மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் ; கீழிருந்தும் கீழல்லர் கீழலல்லவர்’ என்னும் முன்னோர் மொழியையும் உட்கொண்டு சமாதானம் ஆவதற்கு முயற்சிப்பார்களாக.

இந்தியர்களுக்கெல்லாம் பொது உடைமைகள் இன்னின்னவை என்றும், இந்தியன் ஒவ்வொருவனுக்கும் தனியுடைமைகள் இன்னின்னவை என்றும், நாம் எல்லோரும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். பொது உடைமைகளில் இந்தியர்கள் எல்லார்க்கும் சமவுரிமை உண்டு. தனியுடைமைகளில் அவற்றின் சொந்தக் காரருக்கு மாத்திரம் தனியுரிமை உண்டு. கல்வி, ஒழுக்கம், கடவுள் வழிபாடு, ஆற்றுநீர், ஏரிநீர், பெரும்பாட்டை, பொதுக் கூட்டுறவு, காட்டில் வாழும் உயிர்கள், இராஜாங்க உத்தியோகங்கள் முதலியன பொது உடைமைகள். ஒருவனுடைய செல்வம், குளத்து நீர், கிணற்று நீர், நடைபாதை, வீடு, வீட்டில் வாழும் உயிர்கள், சொந்த வேலைகள் முதலியன தனி உடைமைகள். 

பொது உடைமைகளில் யாவர்க்கும் சம உரிமை யுண்டாதலால், அவற்றை ஒருவன் அனுபவித்தலை மற்றொருவன் தடுக்கலாகாது. 

தனியுடைமைகளில் அவற்றின் சொந்தக்காரருக்கு மாத்திரம் தனியுரிமை உண்டாதலால், அவற்றை அவர் தவிர வேறொருவன் அநுபவிக்க முற்படலாகாது. 

இவற்றை ஆதாரமாகக் கொண்டு இந்தியர்களுக்கெல்லாம் பொது உடைமைகள் இன்னின்னவையயன்றும், இந்தியன் ஒவ்வொருவனுக்கும் தனியுடைமைகள் இன்னின்னவை யென்றும், நம் தேசத்துப் பல ஜாதித் தலைவர்களும் ஒன்று கூடிப் பேசி ஆலோசனை செய்துவரையறுத்து முடிவு செய்தலே நமது ஒற்றுமைக்கு மூன்றாவது வழியாகும்.

இவ்வுண்மையை அறியாது நம்மில் அறிவாளிகளாயுள்ளவர்களும் கூட நமது தேசத்தில் நிலவும் ஜாதி வேற்றுமையொன்றே நமது ஒற்றுமை யின்மைக்குக் காரணம் என்று கூறுகின்றனர். அவ்வொன்றே காரண மென்பது சரியன்று. 

இப்பொழுது நமது தேசத்தில் பிறப்பை ஆதாரமாகக் கொண்டு  நிலவும் அநீதியான ஜாதி வேற்றுமை ஒழிக்கப்பட வேண்டுவது அவசியம்தான். அது விரைவில் ஒழியுமா? என்பது மற்றொரு வினா. 

அது ஒழிந்த பின் அதற்குப் பதிலாக வேறொன்றை ஆதாரமாகக் கொண்டு ஜாதி வேற்றுமைகள் உண்டாகவா? என்பது மற்றொரு வினா. 

இவ்வினாக்களுக்கு விடைகள் பின்னர்க் கூறுகின்றேன். 

நமது ஒற்றுமையின்மைக்கு முக்கிய காரணம் நமது பொதுவுடைமைகள் இன்னின்னவையயன்றும் தனி யுடைமைகள் தனியுடைமைகள் இன்னின்னவையயன்றும் அறியாது சிலர் பொதுவுடைமைகளிற் சிலவற்றைத் தமது தனியுடைமைகள் என்று கொண்டு அவ்வுடைமைகளில் மற்றவர்களுக்குள்ள சமவுரிமையைக் கொடுக்க மறுக்கின்றனர். 

வேறு சிலர் தனியுடைமைகளில் சிலவற்றைப் பொது வுடைமைகள் என்று கருதி, அவ்வுடைமைகளிற் சமவுரிமை கொண்டாட முற்படுகின்றனர்.

பொதுவுடைமைகளில் சமவுரிமையை மறுப்பதற்கு உதாரணம் -ஓர் ஊர் ஜனங்களுடைய பொது நன்மைக்காக இராஜங்கத்தார் அல்லது ஸ்தலஸ்தாபனத்தார், அவ்வூரில் ‘உயர்ந்த ஜாதியார்’ என்னப்படுவோர் வசிக்கும் வீடுகளுக்குச் சமீபமாயுள்ள பொது இடத்தில் ஒரு குளமோ, கிணறோ வெட்டுகின்றனர். தங்கள் வீடுகளுக்குச் சமீபமாயிருக்கின்ற காரணத்தால் அவ்வுயர்ந்த ஜாதியார் என்னப்படுவோர் அதில் மற்றை ஜாதியார்கள் குளிக்கக் கூடாது. குடிதண்ணீர் எடுக்கக் கூடாது என்று சொல்லி அதில் மற்றை ஜாதியர்களுக்குள்ள சமவுரிமையை மறுக்கின்றனர். அதனால் அந்த ஊரில் அவ்வுயர்ந்த ஜாதியார் என்னப்படுவோருக்கும் மற்றை ஜாதியார்களுக்கும் ஒற்றுமையின்மையும், பகைமையும் உண்டாகின்றன.

தனியுடைமைகளில் சமவுரிமை கொண்டாடுவதற்கு உதாரணம் :

ஓர் ஊரில் உயர்ந்த ஜாதியார் என்னப்படும் சில ஜாதியார்கள் சேர்ந்து தங்களுக்குள் வரிவிதித்துப் பணம் சேகரித்துத் தங்கள் ஜாதியார்களுடைய சொந்தத் தனி உபயோக்திற்காகத் தாழ்ந்த ஜாதியார்கள் என்னப்படுவோர்கள் அதில் குளிக்க வேண்டும். குடிதண்ணீர் எடுக்க வேண்டும் என்று சொல்லித் தனியுரிமை கொண்டாட முற்படுகின்றார்கள். அவர்கள் செயலை அக்குளத்தின், அல்லது கிணற்றின், சொந்தக்காரர்களான ஜாதியார்கள் தடுக்கின்றார்கள். அதனால் அவ்வுயர்ந்த ஜாதியார் என்னப்படுவோருக்கும் அத்தாழ்ந்த ஜாதியார் என்னப்படுவோருக்கும் ஒற்றுமையின்மையும், பகைமையும் உண்டாகின்றன.

இவ்வுதாரணங்களால் நம் தேசத்தின் சில ஜாதியார்களுள் உண்டா யிருக்கிற ஒற்றுமையின்மைக்கும் பகைமைக்கும் முக்கிய காரணம் பிறப்பை ஆதாரமாகக் கொண்டுள்ள அநீதியான ஜாதி வேற்றுமையும் உயர்வு, தாழ்வும் மாத்திரம் அல்ல ; பொதுவுடைமைகளில் சிலர் மற்றவர்களுக்குரிய சமவுரிமையைக் கொடுக்க மறுத்தலும், தனியுடைமைகளில் அவற்றின் சொந்தக்காரர் அல்லாத சிலர் சமஉரிமை கொண்டாட முற்படுதலுமாம் என்பது தெளிவாக விளங்கும்.

ஓர் உடைமை பொதுவுடைமையா, தனியுடைமையா என்று தீர்மானிப்பதற்குத் தக்க சான்று இல்லையாயின், அவ்வுடைமையைப் பொது உடைமை என்றே தீர்மானித்துவிடலாம்.

ஒற்றுமை நிமித்தமாகத் தனி யுடைமைகளிற் சிலவற்றைப் பொதுவுடைமைகளாக இந்தியர்களெல்லாம் அநுபவிக்கும்படி விட்டுவிடலாம். இவ்வாறாக நமக்குள் ஒற்றுமையை உண்டுபண்ணி வளர்த்தல் இன்றியமையாதது.

‘தென் இந்தியா நலவுரிமை சங்கத்தார்’ சென்ற பல வரு­ங்களாக வேண்டுகின்ற ‘வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம்’ நமது பொதுவுடைமைகளில் முக்கியமான சிலவற்றை விளக்கிக்காட்டி நமக்குள் ஏற்பட்டுள்ள ஒற்றுமை யின்மையையும் பகைமையையும் குறைக்க வல்லது. அது காரணத்தால் அவ் ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை’ப் பற்றிச் சில இங்குக் கூறுகின்றேன்.

No comments:

Post a Comment